300 பாம்புகளை பிடித்தவரின் உயிரை பறித்த பாம்பு..! நடந்தது என்ன..?

Published by
லீனா

கர்நாடக மாநிலத்தில் 300 பாம்புகளை அசால்டாக பிடித்த நபர் பாம்பு கடித்தே உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம் யாதகிரி மாவட்டத்தில் உள்ள கொடிஹாலா கிராமத்தில் பசவராஜ் பூஜாரி என்பவர் பாம்பு பிடிக்கும் தொழிலில் ஈடுபட்டு வருகிறார். கொடிஹாலா  மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம பகுதிகளில் எங்கு பாம்பு பிடிக்க வேண்டுமென்றாலும், பசவராஜை தான் அணுகுவர்.

இந்நிலையில், நேற்று முன்தினம் கொடிஹாலா கிராமத்தில் உள்ள ஒருவர் வீட்டிற்குள் ஐந்தரை அடி நீளமுள்ள பாம்பு ஒன்று நுழைந்துள்ளது. அந்த பாம்பை பிடிப்பதற்காக பசவராஜ் அழைத்துள்ளனர். அப்போது அவர் குடிபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. நிதானமின்றி இருந்த நிலையில் பாம்பை பிடிக்க மறுப்பு தெரிவிக்காமல், அந்த வீட்டுக்கு சென்றுள்ளார்.

அங்கிருந்து ஐந்தரை அடி நீளமுள்ள விஷப் பாம்பை லாவகமாக படித்துள்ளார் ஆனால் பாம்பை பிடித்தவுடன் அதை பத்திரமாக காட்டிற்குள் விடாமல் பிடித்த பாம்பை கையில் வைத்து அங்குள்ள மக்களிடம் வேடிக்கை காட்டியுள்ளார். அப்போது அந்த பாம்பு அவரை ஐந்து முறை கடித்துள்ளது. இதனால் விஷம் உடல் முழுவதும் பரவி ரத்தத்தில் கலந்து சரிந்து விழுந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். தனது திறமையால் 300 விஷப் பாம்புகளை பிடித்து பசவராஜ் போதையில் அலட்சியமாக செயல்பட்டதால் பாம்பு கடித்தே உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Published by
லீனா

Recent Posts

“கொஞ்சம் சகித்து போயிருக்கலாம்”…மணிமேகலைக்கு அட்வைஸ் கொடுத்த ஷகிலா!

“கொஞ்சம் சகித்து போயிருக்கலாம்”…மணிமேகலைக்கு அட்வைஸ் கொடுத்த ஷகிலா!

சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…

14 hours ago

பாஸ்போர்ட் அப்ளை செய்ய போறீங்களா.? அடுத்த 3 நாட்கள் முடியவே முடியாது.!

மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…

14 hours ago

INDvsBAN : “அவர் ரொம்ப உதவி பண்ணாரு”! சதம் விளாசிய பின் அஸ்வின் பேச்சு!

சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…

14 hours ago

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்! தங்கலான் முதல் வாழ வரை!

சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…

15 hours ago

‘இட்லி கடை’ போட்ட தனுஷ்.! மீண்டும் கேங்ஸ்டர் படமா?

சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…

15 hours ago

INDvBAN : சம்பவம் செய்து வரும் அஸ்வின்-ஜடேஜா! வலுவான நிலையில் இந்தியா!

சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…

15 hours ago