டெல்லியில் கொரோனா நிலைமை கட்டுப்பாட்டில் உள்ளது என முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்தார்.
டெல்லியில் அம்பேத்கர் நகரில் 200 படுக்கைகள் கொண்ட மருத்துவமனை திறந்து வைத்த முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இதை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் கூறுகையில், டெல்லியில் கொரோனா நிலைமை கட்டுப்பாட்டில் உள்ளது, மேலும் உயிரிழப்பு குறைந்துவிட்டன என்று தெரிவித்தார்.
கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க மருத்துவமனையில் உள்ள படுக்கைகள் பயன்படுத்தப்படும் என்று முதல்வர் கூறினார். மேலும் நிலைமை மீண்டும் மோசமாகிவிட்டால், அதைச் சமாளிக்க அரசாங்கம் முழுமையாக தயாராக உள்ளது என கெஜ்ரிவால் கூறினார்.
டெல்லியில் இன்று ஒரே நாளில் 1,404 பேருக்கு கொரோனா, 23 பேர் உயிரிழப்பு.
டெல்லியில் இன்று ஒரே நாளில் 1,404 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில் அங்கு மொத்த பாதிக்கப்பட்டவரின் எண்ணிக்கை 1,44,127 ஆக அதிகரித்தது.
அதுமட்டுமின்றி, டெல்லியில் ஒரே நாளில் 1,130 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், அங்கு குணமடைந்தோரின் எண்ணிக்கை 1,28,232ஆக அதிகரித்துள்ளது.
மேலும் ஒரே நாளில் 16 பேர் உயிரிழந்துள்ளதால், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 4.098 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 10,667 பேர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருவதாக டெல்லி சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
சண்டிகர் : ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதியது. போட்டி சண்டிகரின்…
சண்டிகர் : ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன. போட்டி…
சென்னை : அஜித் - ஆதிக் ரவிச்சந்திரன் கூட்டணியில் உருவாகியுள்ள "குட் பேட் அக்லி" திரைப்படம் தொடர்ந்து வசூலில் சாதனை…
டெல்லி : சட்ட விரோத பணப் பரிவர்த்தனை வழக்கில் சோனியா காந்தி, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மீது…
சண்டிகர் : ஐபிஎல் தொடரின் இன்றைய மேட்சில், பஞ்சாப் மற்றும் கொல்கத்தா அணிகள் முல்லன்பூர் மைதானத்தில் மோதுகின்றன. இரு அணிகளும்…
சென்னை : சாட்டை துரைமுருகன் நடத்தி வரும் யூடியூப் சேனலுக்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும், சாட்டை துரைமுருகன்…