ஜூலை மாதத்தில் முடிவடையும் கொரோனா இரண்டாவது அலை..!அடுத்த 6 மாதங்களில் தொடங்கும் மூன்றாம் அலை – மத்திய வல்லுநர் குழு தகவல்…!

Published by
Edison

ஜூலை மாதத்தில் கொரோனா இரண்டாவது அலை முடிவடையும் என்றும்,எனினும்,அடுத்த 6 மாதங்களில் கொரோனா மூன்றாம் அலை தொடங்கும் என்றும் மத்திய வல்லுநர் குழு தகவல் தெரிவித்துள்ளனர்.

இந்தியாவில் தற்போது கொரோனா 2 ஆம் அலை பரவலானது முன்பை விட மெல்லக் குறைந்து வருகிறது.மேலும்,மகாராஷ்டிரா,டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் கடந்த சில தினங்களாகவே கொரோனா வைரஸ் பாதிப்பு சற்று குறைந்துள்ளது.ஆனால்,தமிழ்நாடு உள்ளிட்ட சில மாநிலங்களில் கொரோனா 2 ஆம் அலையின் தாக்கமானது தற்போது உச்சகட்டத்தை எட்டியுள்ளது.

இந்நிலையில்,இந்தியாவில் கொரோனா பரவலின் நிலை குறித்தும்,அதனை எதிர்கொள்ள எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பற்றிய ஆலோசனைகளை வழங்கவும் மத்திய அரசு மூன்று ஆராய்ச்சியாளர்களைக் கொண்ட குழு ஒன்றை அமைத்துள்ளது.இந்த குழு சூத்ரா – SUTRA (Susceptible, Undetected, Tested (positive) and Removed Approach) என்ற முறையின் அடிப்படையில் தற்போது,கொரோனா 3 ஆம் அலை பற்றிய கணிப்புகளை மத்திய அரசுக்கு வழங்கியுள்ளது.

அதன்படி,இந்தியாவில் மே மாத இறுதியில் ஒரு நாளைக்கு சுமார் 1.5 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று இருக்கும் என்றும்,ஆனால்,ஜூன் மாத இறுதியில் தினசரி கொரோனா பாதிக்கப்பட்டவரின் எண்ணிக்கை 20,000 ஆக குறையும் என்றும் வல்லுநர்கள் கணித்துள்ளனர்.

குறிப்பாக,தமிழ்நாட்டில் வரும் மே 29 முதல் 31 ஆம் தேதி வரையிலும், புதுச்சேரியில் 19 முதல் 20 வரையிலான தேதிகளிலும் கொரோனா உச்சமடையும் எனக் கூறப்பட்டுள்ளது.

மேலும்,கொரோனா பரவலின் 3 ஆம் இலை இன்னும் 6 முதல் 8 மாதங்களில் நாட்டில் ஏற்படலாம் என்றும்,இருப்பினும்,அதிக பேருக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டிருக்கும் என்பதால் பெரும் பாதிப்பு ஏற்படாது என்றும் மத்திய அரசின் வல்லுநர் குழு தெரிவித்துள்ளது.

Recent Posts

பாரம்பரிய முறையில் மாவிளக்கு செய்வது எப்படி.?

பாரம்பரிய முறையில் மாவிளக்கு செய்வது எப்படி.?

சென்னை -புரட்டாசி சனிக்கிழமை பெரும்பாலானோர்  பெருமாளுக்கு மாவிளக்கு படைக்கப்படுவது வழக்கம் . பெருமாளுக்கு பிடித்த மாவிளக்கு செய்வது எப்படி என…

26 mins ago

குக் வித் கோமாளி 5 : அடுத்த தொகுப்பாளர் யார்? வெளியான ப்ரோமோ!

சென்னை : மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக அதிக பார்வையாளர்களைக் கொண்ட ஒரு நிகழ்ச்சி தான் 'குக் வித் கோமாளி'.…

1 hour ago

2025 ஆஸ்கர் விருது: போட்டியில் ‘வாழை’ உள்ளிட்ட 6 தமிழ் திரைப்படங்கள்!

டெல்லி : சினிமா உலகில் மிக உயரிய விருதாக கருதப்படும் ஆஸ்கர் விருது ஆண்டுதோறும் அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில்…

2 hours ago

“நாம தான் முட்டாள் ஆயிருவோம்”! மணிமேகலை-பிரியங்கா சர்ச்சையை குறித்து பேசிய KPY சரத்!

சென்னை : சமீபத்தில் வெடித்த மணிமேகலை - பிரியங்கா சர்ச்சை தற்போது வரை தணியாமல் மேலும் மேலும் வெடித்து கொண்டே…

2 hours ago

ஆம்ஸ்ட்ராங் கொலைக்கும் சீசிங் ராஜாவுக்கும் தொடர்பில்லை.! காவல்துறை விளக்கம்.!

சென்னை : பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு வந்த பிரபல ரவுடி சீசிங் ராஜாவை நேற்று ஆந்திர மாநிலம் கடப்பாவில் நேற்று…

3 hours ago

ரஷ்ய சர்வதேச மேடையில் ஒலித்த தமிழ்.. கொட்டுக்காளிக்கு குவியும் விருது.!

சென்னை : இயக்குனர் பி.எஸ்.வினோத்ராஜ் இயக்கத்தில் சூரி மற்றும் அன்னா பென் நடித்துள்ள "கொட்டுக்காளி" திரைப்படம் ஒவ்வொரு சர்வதேச மேடையிலும்…

3 hours ago