மதிப்பெண் வாழ்க்கையை தீர்மானிக்காது.! ஐஏஎஸ் அதிகாரி பகிர்ந்த 12 வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்.!

Published by
Ragi

ஐஏஎஸ் அதிகாரி ஒருவர் தனது 12-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழை பகிர்ந்து, மதிப்பெண்கள் வாழ்க்கையை தீர்மானிக்காது என்று கூறியுள்ளார்.

சிபிஎஸ்இ 12-ஆம் வகுப்புக்கான தேர்வு முடிவுகள் நேற்று முன்தினம் வெளியாகியது. இந்த ஆண்டு சிபிஎஸ்இ தேர்வில் 38,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் 95%க்கு மேல் மதிப்பெண்களும், 1.5 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் 90% மற்றும் அதற்கு மேலும் மதிப்பெண்களை பெற்றுள்ளனர்.

இந்த நிலையில் ஐஏஸ் அதிகாரி ஒருவர் தனது சிபிஎஸ்இ 12 வகுப்பில் வேதியியல் பாடத்திற்கு அவர் எடுத்த மதிப்பெண்ணை சுட்டி காட்டி, மதிப்பெண்கள் எப்போதும் நமது வாழ்க்கையை தீர்மானிக்காது என்று தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

நிதின் சங்வான், 2002-ல் வேதியியல் பாடத்திற்கு 24 மதிப்பெண்கள் மட்டுமே பெற்றிருந்தார், ஆனாலும் கடினமான தேர்வான சிவில் தேர்வில் வெற்றி பெற்று ஐஏஎஸ் அதிகாரியாக உள்ளார் .2015-ல் சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்ற நிதின் ஐஆர்எஸ் அதிகாரியாக இருந்து தற்போது குஜராத்தின் அகமதாபாத்தில் உள்ள ஸ்மார்ட் சிட்டியின் துணை நகராட்சி ஆணையர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியாக உள்ளார்.

அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியதாவது, எனது 12-ஆம் வகுப்பு தேர்வில், வேதியியல் பாடத்திற்கு 24 மதிப்பெண் மட்டுமே கிடைத்தது. ஆனால், என் வாழ்க்கையை அந்த மதிப்பெண்கள் தீர்மானிக்கவில்லை. எனவே மதிப்பெண்கள் அதிகம் எடுக்க வேண்டும் என்று குழந்தைகளின் மீது சுமையேற்ற வேண்டாம். போர்டு முடிவுகளை விட வாழ்க்கை அதிகம். முடிவுகள் அடுத்தக்கட்டத்திற்கான வாய்ப்பே ஒழிய, விமர்சனம் செய்வதற்கு அல்ல என்று கூறியுள்ளார். தற்போது இவரது இந்த ட்வீட் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

 

Published by
Ragi

Recent Posts

சிரியாவில் கார் குண்டுவெடிப்பு… உயிரிழப்பு எண்ணிக்கை 20 ஆக உயர்வு!

சிரியாவில் கார் குண்டுவெடிப்பு… உயிரிழப்பு எண்ணிக்கை 20 ஆக உயர்வு!

மன்பிஜ் : சிரியாவின் மன்பிஜ் நகரில் நேற்று மதியம் வெடிகுண்டு நிரப்பப்பட்டிருந்த கார் வெடித்து சிதறியதில், அதன் அருகே இருந்த…

2 minutes ago

நாளை ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்… வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகள் தீவிரம்!

ஈரோடு : ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலுக்கான பரப்புரை நேற்று மாலை 6 மணியோடு நிறைவு பெற்றது. அரசியல் கட்சியினர்…

32 minutes ago

INDvENG : முதல் ஒரு நாள் போட்டியில் களமிறங்கவுள்ள இந்திய வீரர்கள்!

மகாராஷ்டிரா : இந்திய கிரிக்கெட் அணி தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட டி20…

11 hours ago

பெரியார் குறித்து சீமான் பேச்சு! கலவரம் வேண்டாம் என அமைதியாக இருக்கிறோம் – வைகோ

சென்னை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தந்தை பெரியார் குறித்து தொடர்ச்சியாக விமர்சித்து பேசி வருகிறார்.  இதன் காரணமாக…

12 hours ago

ரசிகர்களுக்கு மீண்டும் சர்ப்ரைஸ்! STR51 படத்தின் வெறித்தனமான அப்டேட்!

சென்னை : இன்று நடிகர் சிம்புவின் பிறந்த நாளை முன்னிட்டு அவர் நடிக்கும் படங்களின் அப்டேட்டுகள் தொடர்ச்சியாக வெளியாகி கொண்டு இருக்கிறது.…

12 hours ago

சாம்பியன்ஸ் டிராபி 2025 : டிக்கெட் வாங்கிவிட்டீர்களா? ஐசிசி கொடுத்த முக்கிய அப்டேட்!

துபாய் : ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025-க்கான கிரிக்கெட் போட்டிகள் வரும் பிப்ரவரி 19 முதல் தொடங்கி மார்ச் 9ஆம்…

13 hours ago