அரசுப் பேருந்தை திருடிச் சென்ற கொள்ளையர்கள்..! போலீசார் தீவிர விசாரணை..!

Default Image

கர்நாடகாவில் அரசுப்பேருந்தை திருடி சென்ற கொள்ளையர்களை பிடிக்க போலீசார் தீவிர விசாரணை.

கர்நாடகாவின் கல்புர்கி மாவட்டம் சின்சொலி பகுதியில் பேருந்து நிறுத்தத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அரசு பேருந்தை அடையாளம் தெரியாத கொள்ளை கும்பல் திருடிச் சென்றுள்ளனர். சின்சொலி பகுதியில் உள்ள பேருந்து நிறுத்த டிப்போவில் இரவு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அரசு பேருந்தை அதிகாலையில் ஒரு கும்பல் திருடிச்சென்றுள்ளது.

இந்த சம்பவம் குறித்து காவல்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டதும் பேருந்து நிறுத்தத்திற்கு விரைந்தனர். டிப்போவில் உள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்த காவல்துறையினர் பேருந்து திருடப்படும் காட்சி பதிவாகியுள்ளதை கண்டனர்.

இதையடுத்து அப்பகுதியை சுற்றியுள்ள சுங்கச்சாவடிகளில் உள்ள கேமரா பதிவுகளை சோதனை செய்த போது கொள்ளையர்கள் பேருந்தை தெலுங்கானா மாநிலத்திற்கு கடத்தி சென்றுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து கொள்ளையர்களை பிடிப்பதற்காக தனிப்படை போலீசார் தெலுங்கானாவிற்கு சென்றுள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்