Categories: இந்தியா

உபேர் டிரைவரை பீர் பாட்டிலால் தாக்கி கொள்ளையடிக்க முயன்ற கொள்ளையர்கள்..!

Published by
லீனா

டெல்லியில் உபர் டாக்சியின் ஓட்டுநர் பிரியங்காவை தாக்கி பணத்தை பறித்த கொள்ளையர்கள்.

டெல்லியில் உபர் டாக்சியின் ஓட்டுநராக இருப்பவர் பிரியங்கா என்ற பெண். அப்பெண் சமயபூர் பகுதியில் வசித்து வருகிறார். இவர் நேற்று இரவு வாடிக்கையாளர்கள் தன்னை அழைத்ததால் காரை எடுத்துக் கொண்டு புறப்பட்டார்.

வெளிமாநில பேருந்துகளை நிறுத்தும் டெர்மினஸ் இருக்கும் காஷ்மிரா கேட் நோக்கி சென்றுள்ளார். இரவில் கடுமையான பனிமூட்டம் காணப்பட்டதால் பிரியங்கா காரை மெதுவாக ஓட்டி சென்றுள்ளார்.

கார் வாடிக்கையாளர் அருகில் சென்ற போது காரின் முன் பக்கமாக வந்து இரண்டு பேர் காரை நோக்கி கற்களை வீசி உள்ளனர். அந்த கல் காரின் கண்ணாடியை உடைத்ததோடு பிரியங்காவின் தலையில்பட்டது. மேலும் உடைந்த கண்ணாடி துண்டுகள் அவரது உடலையும் தாக்கியுள்ளது.

இதனை அடுத்து பிரியங்கா என்ன நடக்கிறது என்று பார்ப்பதற்காக வெளியில் இறங்கி வந்துள்ளார். அப்போது கற்களை வீசியவர்கள் அவரது போனை பிடுங்க முயன்றுள்ளனர். ஆனால் அந்த போனை அவர் போராடி காப்பாற்றிக் கொண்டார். மேலும் அவரிடம் இருந்து பணத்தை பறித்துக் கொண்டனர்.

இது குறித்து பிரியங்கா கூறுகையில், என்னை தாக்கிய இரண்டு பேரும் காரின் சாவியை பிடுங்க முயன்றனர். ஆனால் கார் என்னுடையது கிடையாது என்று அவர்களிடம் தெரிவித்தேன். அதோடு உதவிக்காக கத்தினேன். இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் இரண்டு பேரும் பீர்பாட்டிலால் என்னை கழுத்து மற்றும் நெஞ்சு பகுதியில் தாக்கினர்.

கழுத்தில் இருந்து ரத்தம் வந்ததால் ரத்தம் வராமல் தடுப்பதற்காக துணியால் கழுத்தை மறைத்துக் கொண்டு உபர் அவசர எண்ணை தொடர்பு கொண்டேன். அந்த வழியாக சென்ற வாகனத்தை நிறுத்தி உதவி கேட்க முயற்சித்தேன். ஆனால் எனக்கு யாரும் உதவ முயற்சிக்கவில்லை.

30 நிமிடங்களுக்கு பின் காவல்துறையினர் அந்த இடத்திற்கு வந்து என்னை மருத்துவமனையில் சேர்த்தனர். மருத்துவமனையில் எனக்கு பத்து தையல் போடப்பட்டது. அந்த நேரத்தில் நாம் சுயநினைவு இல்லாத காரணத்தால் நான் குற்றவாளிகள் மீது புகார் அளிக்கவில்லை என தெரிவித்தார்.

பிரியங்கா புகார் அளிக்கவில்லை என்றாலும், இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து, போலீசார் தாக்கிய குற்றவாளிகளை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Published by
லீனா

Recent Posts

ENGvsAUS : ‘ஹாரி புரூக்’ அதிரடி! ஆஸ்திரேலியாவுக்கு பதிலடி கொடுத்த இங்கிலாந்து!

ENGvsAUS : ‘ஹாரி புரூக்’ அதிரடி! ஆஸ்திரேலியாவுக்கு பதிலடி கொடுத்த இங்கிலாந்து!

செஸ்டர்-லீ-ஸ்ட்ரீட் : இங்கிலாந்து - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் சுற்றுப் பயணத் தொடரில் இன்று 3-வது ஒருநாள் தொடர்…

6 hours ago

தீவிரமடையும் பஞ்சாமிர்தம் விவகாரம்.,, மோகன்.ஜி மீது கோயில் நிர்வாகம் புகார்.!

சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயில் லட்டு பிரசாதத்தில் விலங்கின் கொழுப்புகள் இருந்ததாக எழுந்த குற்றசாட்டுகளை தொடர்ந்து, மாநில அமைப்பின்…

14 hours ago

குக் வித் கோமாளியில் மணிமேகலை அனுபவித்த வேதனை? உண்மையை உடைத்த வெங்கடேஷ் பட்!

சென்னை : சின்னதிரையில் பெரும் பரபரப்பாகப் பேசப்பட்டு வரும் ஹாட் டாப்பிக்காக மணிமேகலை vs பிரியங்கா பிரச்சினை மாறிவிட்டது என்றே…

14 hours ago

சென்னையில் கொட்டி வரும் மழை.. அடுத்த 7 நாட்களுக்கும் வெளுத்து வாங்கும்!

சென்னை : சென்னையில் பல்வேறு இடங்களில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. கடந்த சில நாட்களாக வெப்பம் வாட்டிவதைத்த நிலையில்,…

14 hours ago

குடை தானம் செய்வதால் ஏற்படும் பலன்கள்..!

சென்னை -குடை தானம் செய்தால் என்ன பலன்கள் கிடைக்கும் ,கட்டாயம் கொடுக்க வேண்டிய ராசிக்காரர்கள் யார் என்பதை பற்றி இந்த…

14 hours ago

“வந்து பதில் சொல்கிறேன்”! பவான் கல்யாண் வார்னிங்கிற்கு பதிலளித்த பிரகாஷ் ராஜ்!

விஜயவாடா : திருப்பதி ஏழுமலையான் கோவிலின் பிரசாதமான லட்டுவில் மிருக கொழுப்புகள் சேர்க்கப்ட்டுள்ளதாக எழுந்துள்ள சர்ச்சை பரபரக்க பேசப்பட்டு வருகிறது.…

14 hours ago