Congress Prez poll: காங்கிரஸ் கட்சியின் மறுமலர்ச்சி தொடங்கியுள்ளது -சசி தரூர்

Published by
Dinasuvadu Web

இந்திய தேசிய காங்கிரஸின் தலைவிதி கட்சி தொண்டர்களின் கைகளில் உள்ளது.ஆனால் நீங்கள் பாதுகாப்பாக விளையாடினால், நீங்கள் நிச்சயமாக தோல்வியடைவீர்கள்-சசி தரூர்

அகில இந்திய காங்கிரஸ் தலைவர் தேர்தலின் வாக்குப்பதிவு இன்று டெல்லி உள்ளிட்ட நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.தலைவர் பதவிக்கு மூத்த தலைவர் மல்லிகார்ஜூன கார்கே மற்றும் திருவனந்தபுரம் எம்.பி.சசி தரூர் ஆகியோர் இடையே நேரடி போட்டி நிலவுகிறது.

திருவனந்தபுரத்தில் வாக்களித்த பின் செய்தியாளர்களை சந்தித்த சசி தரூர் எந்த முடிவு வந்தாலும் பழைய கட்சியின் மறுமலர்ச்சி தொடங்கியுள்ளது என்றும், இந்திய தேசிய காங்கிரஸின் தலைவிதி கட்சி தொண்டர்களின் கைகளில் உள்ளது என்று கூறினார்.

தேர்தலில் வெற்றி பெறுவேன் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் ஆனால் தனக்கு எதிராக அடுக்கி வைக்கப்பட்டுள்ள முரண்பாடுகளை ஒப்புக்கொண்டதாகவும் தரூர் கூறினார்.காலையில் மல்லிகார்ஜூனிடம் பேசியதையும் அவருக்கு வாழ்த்து தெரிவித்ததையும் ட்விட்டரில் பகிர்ந்துள்ள தரூர் அடுத்து ஒரு சூசகமான ட்விட்டையும் பதிவிட்டுள்ளார்.

இதற்கிடையில் சசி தரூர் செய்துள்ள ட்விட்டில்,”சிலர் தோற்கக்கூடாது என்பதற்காக பாதுகாப்பாக விளையாடுகிறார்கள். ஆனால் நீங்கள் பாதுகாப்பாக விளையாடினால், நீங்கள் நிச்சயமாக தோல்வியடைவீர்கள்.” என்று கூறியுள்ளார்.

காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 10 மணிக்கு தொடங்கி மாலை 4 மணிக்கு முடிவடைகிறது. அக்டோபர் 19ஆம் தேதி முடிவுகள் அறிவிக்கப்படும்.

 

Published by
Dinasuvadu Web

Recent Posts

துணை முதல்வர் கேள்வி., “அரசியல் வேண்டாம்” ஒதுங்கிய ரஜினிகாந்த்.!

துணை முதல்வர் கேள்வி., “அரசியல் வேண்டாம்” ஒதுங்கிய ரஜினிகாந்த்.!

சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், துணை முதலமைச்சராக அறிவிக்கப்பட உள்ளார் என்ற பேச்சுக்கள் தற்போது தமிழக…

8 mins ago

திருப்பதி லட்டு விவகாரம் : “இந்துக்கள் என்றால் இளிச்சவாயர்களா?” இயக்குநர் மோகன்ஜி காட்டம்!

சென்னை : திருப்பதியில் வழங்கப்படும் லட்டில் மாட்டுக்கொழுப்பு. மீன் எண்ணெய் போன்றவை கலப்பதாக எழுந்துள்ள புதிய சர்ச்சை, நாடு முழுவதும்…

2 hours ago

இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை.. சவரனுக்கு எவ்வளவு தெரியுமா?

சென்னை : கடந்த 3 நாள்களாக குறைந்து வந்த தங்கம் விலை, இன்று மீண்டும் உயர்ந்து சவரன் ரூ.55,000-ஐ கடந்தது.…

2 hours ago

“சுயமரியாதை முக்கியம்…கடவுளுக்கு மட்டும் தலைவணங்குங்கள்”…மணிமேகலை அட்வைஸ்!

சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து மணிமேகலை விலகியது பெரிய அளவில் பேசுபொருளாகும் விவகாரமாக வெடித்துள்ள நிலையில், இந்த…

2 hours ago

இன்னும் 10 நாளில் உதயநிதி துணை முதல்வர்.! அமைச்சர் கொடுத்த அப்டேட்.!

சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தான், அடுத்ததாக திமுக கட்சியை வழிநடத்த உள்ளார். அவரை…

3 hours ago

அக்டோபர் 27இல் த.வெ.க மாநாடு.! விஜய் அறிவிப்பு.!

சென்னை : விழுப்புரம் விக்கிரவாண்டியில் அக்.27ல் தவெக மாநாடு நடைபெற உள்ளதாக அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவித்துள்ளார். இது தொடர்பாக…

3 hours ago