கொரோனாவால் பெற்றோரை இழந்து தவிக்கக்கூடிய குழந்தைகளின் மறுவாழ்வுக்கான வழிமுறைகளை மகளிர் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
நாடு முழுவதிலும் கொரோனாவின் இரண்டாம் அலை மிக தீவிரமாக பரவி வரும் நிலையில், நாளுக்கு நாள் ஆயிரக்கணக்கானோர் புதிதாக பாதிக்கப்பட்டு கொண்டே இருக்கின்றனர். இந்நிலையில், கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகள் ஆதரவற்று தனித்து விடப்படுவதாக புகார் எழுந்துள்ள நிலையில் டெல்லி, மகாராஷ்டிரா, சத்தீஸ்கர், மத்திய பிரதேசம் உள்ளிட்ட சில மாநிலங்கள் பெற்றோரை இழந்து உள்ள குழந்தைகளுக்கு இலவச கல்வி வழங்கப்படும் என அறிவித்திருக்கிறது. இந்நிலையில் இது குறித்து மகளிர் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் சில வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.
அதில் பெற்றோரை இழந்து பராமரிப்பிற்கு ஆளில்லாத குழந்தைகளை 24 மணி நேரத்தில் மாவட்ட குழந்தைகள் நல குழுவிடம் ஒப்படைக்க வேண்டும் எனவும், குழந்தைகளுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் மாவட்ட குழந்தைகள் நல குழுவே வழங்குவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதுகுறித்த தகவல்களை 1908 எனும் இலவச தொலைபேசி எண்ணில் தெரிவிக்கலாம் எனவும், இந்த எண்ணுக்கு தொடர்புகொண்டு பெற்றோரை இழந்த குழந்தைகள் பற்றி தெரிவிப்பவர்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பாக அனைத்து உதவிகளும் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அது போல பெற்றோரை இழந்து தவித்து கூடிய குழந்தைகள் சட்டபூர்வமாக மட்டுமே தடுக்கப்பட வேண்டும் என்பதால், அதற்கான இணையதளத்தை மத்திய அரசு நேரடியாகவும் வெளியிட்டுள்ளது. அதுபோல இதுபோன்ற குழந்தைகள் குழந்தைகள் பராமரிப்பு மையங்களில் அனுமதிக்கப்பட்டு இருந்தாலும் அவர்களின் நலன் குறித்து குழந்தைகள் நலக்குழு தொடர்ச்சியாக கண்காணிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…