கொரோனாவால் பெற்றோரை இழந்து தவிக்கக்கூடிய குழந்தைகளின் மறுவாழ்வுக்கான வழிமுறைகளை மகளிர் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
நாடு முழுவதிலும் கொரோனாவின் இரண்டாம் அலை மிக தீவிரமாக பரவி வரும் நிலையில், நாளுக்கு நாள் ஆயிரக்கணக்கானோர் புதிதாக பாதிக்கப்பட்டு கொண்டே இருக்கின்றனர். இந்நிலையில், கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகள் ஆதரவற்று தனித்து விடப்படுவதாக புகார் எழுந்துள்ள நிலையில் டெல்லி, மகாராஷ்டிரா, சத்தீஸ்கர், மத்திய பிரதேசம் உள்ளிட்ட சில மாநிலங்கள் பெற்றோரை இழந்து உள்ள குழந்தைகளுக்கு இலவச கல்வி வழங்கப்படும் என அறிவித்திருக்கிறது. இந்நிலையில் இது குறித்து மகளிர் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் சில வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.
அதில் பெற்றோரை இழந்து பராமரிப்பிற்கு ஆளில்லாத குழந்தைகளை 24 மணி நேரத்தில் மாவட்ட குழந்தைகள் நல குழுவிடம் ஒப்படைக்க வேண்டும் எனவும், குழந்தைகளுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் மாவட்ட குழந்தைகள் நல குழுவே வழங்குவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதுகுறித்த தகவல்களை 1908 எனும் இலவச தொலைபேசி எண்ணில் தெரிவிக்கலாம் எனவும், இந்த எண்ணுக்கு தொடர்புகொண்டு பெற்றோரை இழந்த குழந்தைகள் பற்றி தெரிவிப்பவர்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பாக அனைத்து உதவிகளும் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அது போல பெற்றோரை இழந்து தவித்து கூடிய குழந்தைகள் சட்டபூர்வமாக மட்டுமே தடுக்கப்பட வேண்டும் என்பதால், அதற்கான இணையதளத்தை மத்திய அரசு நேரடியாகவும் வெளியிட்டுள்ளது. அதுபோல இதுபோன்ற குழந்தைகள் குழந்தைகள் பராமரிப்பு மையங்களில் அனுமதிக்கப்பட்டு இருந்தாலும் அவர்களின் நலன் குறித்து குழந்தைகள் நலக்குழு தொடர்ச்சியாக கண்காணிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராமேஸ்வரம் : பிரதமர் நரேந்திர மோடி இன்று, ராமேஸ்வரத்தில் பாம்பன் புதிய ரயில் பாலத்தை திறந்து வைத்தார். இது இந்தியாவின்…
சென்னை : கடந்த 2-3 சீசன்களாக தோனியின் முழங்கால் பிரச்சினைகள், அவர் தொடர்ந்து பேட்டிங்கிற்கு தாமதமாக வருவது மற்றும் அவரது…
கொச்சி : கேரளாவின் பெரும்பாவூரில் ஒரு தனியார் நிறுவன ஊழியர் தரையில் வைக்கப்பட்ட கிண்ணத்தில் இருந்து விலங்குகளைப் போல தண்ணீர்…
ராமேஸ்வரம் : நாட்டின் முதல் செங்குத்து தூக்கு பாலமான பாம்பன் ரயில் பாலத்தை பிரதமர் திறந்து வைத்தார். பாம்பனில் கடலுக்கு நடுவே…
ராமேஸ்வரம் : நாட்டின் முதல் செங்குத்து தூக்கு பாலமான பாம்பன் ரயில் பாலத்தை பிரதமர் திறந்து வைத்தார். பாம்பனில் கடலுக்கு…
சென்னை : தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…