செல்ஃபி எடுக்க முயன்றதால் வந்த வினை.! தவறி விழுந்து பலியான 2 இளைஞர்கள்.!

Published by
Ragi

செல்ஃபி எடுக்க முயன்ற போது இரண்டு இளைஞர்கள் 1,000 அடியுள்ள பள்ளத்தாக்கில் தவறி விழுந்து உயிரிழந்துள்ளனர்.

இன்றைய இளைஞர்கள் உட்பட பலர் செல்ஃபி என்ற பெயரில் மலையிலும், ரயில் தண்டவாளத்திலும் செய்யும் சாகசத்தால் பல உயிர்கள் பலியாகியுள்ளனர். அந்த வகையில், செல்ஃபி எடுக்க முயன்ற இரு இளைஞர்கள் நேற்று முன்தினம் பள்ளத்தாக்கில் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேசத்தில் உள்ள தார் மாவட்டத்தின் தாஹி பகுதியை சேர்ந்தவர்கள் தினேஷ் (25) மற்றும் பண்டி(22). இவர்கள் இருவரும் சுற்றுலா தலமான ராம்கர் கோட்டைக்கு சென்றுள்ளனர்.

அங்கு பெய்த தொடர் மழையால் பனி சூழ்ந்து அப்பகுதி அழகாக இருந்ததை அடுத்து அந்த இரண்டு இளைஞர்களும் செல்ஃபி எடுக்க முயன்றுள்ளனர். அப்போது இருவரும் 1,000 அடியுள்ள பள்ளத்தாக்கில் தவறி விழுந்துள்ளனர். தகவலறிந்து விரைந்து வந்த போலீசாரால் அப்பகுதியில் பெய்த தொடர் மழை மற்றும் இரவினில் வெளிச்சம் இல்லாத காரணத்தால் இளைஞர்களை தேடுவதில் சிக்கல் ஏற்பட்டது. அதனையடுத்து அவர்களது உடல்கள் சடலமாக நேற்று மீட்கப்பட்டு பிரேத பரிசோதனை செய்த பின்னர் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.

Published by
Ragi

Recent Posts

திருப்பதி லட்டு விவகாரம் : சிறப்பு யாகம் நடத்தி ‘புனித நீர்’ தெளித்த தேவஸ்தானம்.!

திருப்பதி லட்டு விவகாரம் : சிறப்பு யாகம் நடத்தி ‘புனித நீர்’ தெளித்த தேவஸ்தானம்.!

திருப்பதி : ஆந்திர மாநிலம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் தேவஸ்தான லட்டுகளில் விலங்கின் கொழுப்புகள் கலந்ததாக சமீபத்திய…

60 mins ago

வார தொடக்கத்தில் உச்சம் தொட்ட தங்கம் விலை!

சென்னை : வார தொடக்க நாளான இன்று ஆபரணத் தங்கத்தின் விலை புதிய உச்சத்தை எட்டியுள்ளது. தங்கம் விலை தொடர்ந்து…

1 hour ago

செஸ் ஒலிம்பியாட்டில் இந்தியா வரலாற்று சாதனை! பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து!

புதாபெஸ்ட் : ஹங்கேரியில் நடைபெற்று வந்த இந்த ஆண்டிற்க்கான மற்றும் 45-வது செஸ் ஒலிம்பியாட் தொடரின், ஓபன் பிரிவில் இந்திய…

2 hours ago

இலங்கையின் 9-வது அதிபராக பதவியேற்றார் அநுர குமார திசநாயக.!

கொழும்பு : இலங்கையின் 9-ஆவது அதிபர் தேர்தல் கடந்த (21-ம் தேதி) சனிக்கிழமை நடைபெற்றது. பொருளாதார நெருக்கடியில் சிக்கிய இலங்கை,…

2 hours ago

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு : ரவுடி சீசிங் ராஜா என்கவுண்டரில் சுட்டுக் கொலை.! நடந்தது என்ன.?

சென்னை : பகுஜன் சமாஜ்வாடி கட்சியின் மாநிலத் தலைவராக பொறுப்பில் இருந்த ஆம்ஸ்ட்ராங், கடந்த ஜூலை மாதம் 5ஆம் தேதி…

2 hours ago

இலங்கை அதிபர் தேர்தலில் அநுர குமார திஸாநாயக்க வெற்றி..!

இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…

16 hours ago