காதல் சின்னம் தாஜ்மஹாலுக்கு சொத்துவரி கேட்டு ஆக்ரா மாநகராட்சி நோட்டீஸ்.
உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹாலுக்கு சொத்துவரி செலுத்துமாறு ஆக்ரா மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பியுள்ளது. பலரும் வியந்து பார்க்கும் கலைநயம் கொண்ட தாஜ்மஹால் புராதன தன்மை கொண்டதால், அதனை மத்திய அரசின் தொல்லியல் துறை நிர்வகித்து வருகிறது.
இந்த சூழ்நிலையில் தாஜ்மஹால் நிர்வாக அதிகாரிகளுக்கு முதல் முறையாக சொத்துவரி கேட்டு ஆக்ரா மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதன்படி, முதல் முறையாக தாஜ்மஹாலுக்கு ரூ.1.9 கோடி தண்ணீர் வரியாகவும், ரூ.1.5 லட்சத்தை சொத்து வரியாகவும் செலுத்துமாறு ஆக்ரா முனிசிபல் கார்ப்பரேஷன், இந்திய தொல்லியல் துறைக்கு (ஏஎஸ்ஐ) உத்தரவிட்டுள்ளது.
இந்த வரி விதித்து 2021-22 மற்றும் 2022-23 நிதியாண்டுக்கானவை. 15 நாட்களில் வரி பாக்கியை செலுத்தாவிட்டால் தங்களது கட்டுப்பாட்டின் கீழ் தாஜ்மஹால் கொண்டுவரப்படும் என ஆக்ரா மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுதொடர்பாக தொல்லியல் துறை கண்காணிப்பாளர் ராஜ்குமார் படேல் கூறுகையில், வரலாற்று சின்னங்களுக்கு சொத்து வரி பொருந்தாது.
மேலும், புல் தரையை பசுமையாக வைத்திருக்கவே தண்ணீரை பயன்படுத்துவதாகவும், வணிக ரீதியாக பயன்படுத்தவில்லை என்பதால் அதற்கும் வரி விதிக்க முடியாது எனவும் கூறியுள்ளார். இருப்பினும், தவறுதலாக நோட்டீஸ் அனுப்பப்பட்டிருக்கலாம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…