ரூ .1800.72 கோடிக்கு மோசடி செய்த தனியார் நிறுவனம் ,புகார் அளித்த எஸ்.பி.ஐ

Default Image

புதுடெல்லி: டெல்லியைச் சேர்ந்த தனியார் நிறுவனம் (கடன் வாங்கிய நிறுவனம்) மீது ரூ .1800.72 கோடிக்கு மோசடி செய்துள்ளதாக ,ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (எஸ்.பி.ஐ) அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்துள்ள மத்திய புலனாய்வுத் துறை, வெள்ளிக்கிழமை டெல்லியில் மூன்று இடங்களில் கடன் வாங்கிய நிறுவனம் மற்றும் குற்றம் சாட்டப்பட்டவர்களின் அலுவலகம் மற்றும் குடியிருப்பு வளாகங்களில் சோதனை நடத்தியது.

இந்நிறுவனம் செய்த மோசடியால் எஸ்பிஐ மற்றும் பிற கூட்டமைப்பு வங்கிகளுக்கு ரூ .1800.72 கோடி (தோராயமாக) இழப்பு என்று கூறப்படுகிறது.லஜ்பத் நகரை தலைமையிடமாக  கொண்டு செயல்படும் இந்நிறுவனம் மற்றும் அதன் இயக்குநர், உத்தரவாததாரர், அரசு ஊழியர்கள் மற்றும் சில நபர்கள் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளதாக சிபிஐ தெரிவித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்