வருகின்ற சுதந்திர தின விழாவில் 45-90 நிமிடங்கள் வரை பிரதமர் உரையாற்றுவார்

Published by
Rebekal

ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தன்று இந்த வருடம் பிரதமர் மோடி 45 – 90 நிமிடங்கள் வரை உரையாற்றுவார் என கூறப்பட்டுள்ளது.

உலகம் முழுவதிலும் கொரானா வைரஸ் அதிகளவில் பரவி வரக் கூடிய சூழ்நிலையில் இந்தியாவிலும் இதன் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் தான் உள்ளது. எனவே அரசு மக்களுக்காக வேலைவாய்ப்பு மற்றும் பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு சில தளர்வுகள் கொடுத்திருந்தாலும், விழாக்களை கொண்டாடுவதற்கு முற்றிலுமாக தடை விதித்துள்ளது. இந்நிலையில் சுதந்திர தின விழா வரும் 15ஆம் தேதி கொண்டாடப்பட இருக்கின்ற நிலையில், பல்வேறு பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறைகள் உடன் சுதந்திர தினவிழா கொண்டாட வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது.

நாட்டின் தலைநகர் மற்றும் மற்ற மாநிலங்களிலும் இந்த ஆண்டு கொண்டாட்டங்கள் அனைத்துக்கும் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. செங்கோட்டையில் பிரதமர் மோடி கொடியேற்றும் விழாவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கொரோனா தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்ட வீரர்கள் மற்றும் ஊழியர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். சுதந்திர தினத்தன்று காலை 7:21 க்கு பிரதமர் மோடி அவர்கள் செங்கோட்டை மைதானத்திற்கு வருகை தருவார்.

7.30 மணிக்கு கொடியை ஏற்றி வைத்து 45 முதல் 90 நிமிடங்கள் வரை பிரதமர் உரையாற்றுவார். நிகழ்ச்சியில் பங்கேற்க கூடிய படைவீரர்கள் மற்றும் காவல்துறையினர் ஒத்திகையை தவிர வேறு எதற்கும் வீட்டை விட்டு வெளியேறக்கூடாது என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மற்றொரு பெரிய மாற்றமாக இந்த ஆண்டு சுதந்திர தின விழாவில் பள்ளி குழந்தைகள் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது, 500 என்சிசி மாணவர்கள் மட்டுமே பங்கேற்க உள்ளனர்.

Published by
Rebekal

Recent Posts

“இது துபாய்.. இது எங்கள் சொந்த ஊர் கிடையாது” சர்ச்சை கேள்விக்கு ரோஹித் சர்மா பதிலடி.!

“இது துபாய்.. இது எங்கள் சொந்த ஊர் கிடையாது” சர்ச்சை கேள்விக்கு ரோஹித் சர்மா பதிலடி.!

துபாய் : சாம்பியன்ஸ் டிராபியில் நாளை நடைபெறவிருக்கும் அரையிறுதி போட்டியில் இந்தியா ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது. இந்த இரு அணிகளும் நாளை…

5 hours ago

ரமலான் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி… தவெக தலைவர் விஜய் பங்கேற்பு.!

சென்னை : வருகின்ற மார்ச் 7ஆம் தேதி தவெக சார்பில் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. ராயப்பேட்டை ஒய்எம்சிஏ…

5 hours ago

நம்மகிட்ட பட்ஜெட் கொடுத்தா லாபம் தாறுமாறா இருக்கும்…கெத்துக்கட்டும் ‘டிராகன்’ அஷ்வத்!

சென்னை : கொடுக்கப்படும் பட்ஜெட்டில் எந்த அளவுக்கு தரமான படத்தை கொடுத்து மக்களை கவர்ந்து அந்த படத்தினை தயாரித்த தயாரிப்பாளர்களுக்கு லாபத்தை…

6 hours ago

IND vs AUS : சாம்பியன்ஸ் டிராபி முதல் அரையிறுதி போட்டி… வானிலை, பிட்ச் நிலவரம்.!

துபாய் : சாம்பியன்ஸ் டிராபியின் அரையிறுதிப் போட்டி இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நாளை (மார்ச் 4 ஆம்…

7 hours ago

இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே! கேப்டன் பொறுப்பை தூக்கி ரஹானேயிடம் கொடுத்த கொல்கத்தா!

கொல்கத்தா : கடந்த 2024-ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணி வெற்றிபெற்று கோப்பையை வென்றது. ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையில்…

7 hours ago

நாகை மாவட்டத்திற்கான புதிய அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர்..!

நாகப்பட்டினம் : நாகையில் ரூ.82.99 கோடி மதிப்பிலான 206 புதிய திட்டங்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். பல்வேறு துறைகள்…

9 hours ago