62வது மான் கி பாத் என்ற நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி ஏவுதளத்தில், ராக்கெட் ஏவுவதை காணும் வகையில், 10,000 பேர் அமரும் வகையிலான கேலரி அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இதன் மூலம் இளைஞர்கள், குழந்தைகளின் அறிவியல் திறனை மேம்படுத்த உதவும் எனவும் பிரதமர் மோடி கூறினார். தொடர்ந்து பேசிய அவர், அடுத்த மாதம் பொதுத்தேர்வுகளை எதிர்கொள்ள உள்ள மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி, 9 வயதில் பள்ளிப்படிப்பை நிறுத்திய கேரளாவைச் சேர்ந்த பாகிரதி அம்மா, 105 வயதில் 4ம் வகுப்பு தேர்வெழுதி 75% மதிப்பெண் பெற்றது அனைவரையும் ஊக்குவிக்கும் விதமாக உள்ளதாக பாராட்டினார்.
இதையடுத்து கற்றது கை மண் அளவு, கல்லாதது உலகளவு என்ற ஔவையின் வரிகளை சுட்டிக் காட்டி, அதற்கான விளக்கத்தையும் அளித்தார். வெகு விமர்சியாக நடைபெற்று முடிந்த மகா சிவராத்திரியையும், வரவுள்ள ஹோலி பண்டிகையையும் குறிப்பிட்டு பேசிய பிரதமர், சமூக கருத்துகளை உள்ளடக்கிய ஒவ்வொரு பண்டிகையும் இந்தியாவை இணைப்பதாக பெருவிதம் தெரிவித்தார்.
சென்னை : சூர்யா, கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் உருவாகியிருக்கும் 'ரெட்ரோ' படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டிருக்கிறது. இரண்டு மாதங்களுக்கு முன்பு…
பெங்களூரு : பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் பெங்களூர் - பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று நடைபெறவிருக்கிறது. இரு அணிகளும்…
டெல்லி : செல்போன் கட்டணத்தை கடந்தாண்டு ஜியோ, ஏர்டெல், வோடாபோன் ஐடியா ஆகியவை உயர்த்தின. பிஎஸ்என்எல் மட்டும் உயர்த்தவில்லை. இந்நிலையில்,…
சென்னை : NDA கூட்டணிக்கு நாதக-வை, நயினார் நாகேந்திரன் அழைத்திருந்த நிலையில், அதற்கு சீமான் நன்றி தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று…
சென்னை : நடிகர் அர்ஜுனின் இளைய மகள் அஞ்சனா கடந்த 2023-ஆம் ஆண்டு ஹேண்ட் பேக் தயாரிக்கும் நிறுவனம் ஒன்றை…
சென்னை : தென்னாப்பிரிக்காவின் இளம் அதிரடி வீரரான டிவால்ட் பிரேவிஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இணைந்துள்ளார். சென்னை சூப்பர்…