காப்பகத்திலிருந்து தப்பித்த பெண்ணை கண்டுபிடித்து கற்பழித்து கர்ப்பமாக்கிய காவலர்!

Published by
Rebekal

காப்பகத்திலிருந்து தப்பித்த பெண்ணை கண்டுபிடித்து கற்பழித்து கர்ப்பமாக்கிய தலைமை காவலர்.

ஒடிசா மாநிலத்தில் உள்ள ரூர்கேலா எனுமிடத்தில் மிக வறுமையில் தவித்த தாய் தனது 13 வயது மகளை கவனித்துக் கொள்ள முடியாததால் ஒரு காப்பகத்தில் சேர்த்துள்ளார். காப்பகத்தில் சிறுமிக்கு தேவையான வசதிகள் இல்லை எனவும் சிறுமி சிரமப்பட்டதாகவும் தெரிகிறது. இதனால் அந்த சிறுமி அந்த காப்பகத்தில் இருந்து தப்பிக்க முடிவு செய்து யாரும் இல்லாத சமயத்தில் அங்கு இருந்து தப்பி ஓடியுள்ளார். சிறுமியை காணவில்லை என்ற காப்பகத்தின் புகாரின் அடிப்படையில் காவலர்கள் அச்சிறுமியை தேடியுள்ளனர். இந்நிலையில் சிறுமி இருந்த இடம் அறிந்து காவலர்கள் அவளை கண்டறிந்து மீண்டும் காப்பகத்தில் சேர்த்துள்ளனர். அதன்பிறகு விசாரணை என்ற பெயரில் தலைமை காவலர் ஒருவர் அந்த சிறுமியை காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார்.
அப்பொழுது கைதிகள் அடைத்து வைக்கக்கூடிய லாக்கப்பில் சிறுமியை கற்பழித்து துன்புறுத்தி உள்ளார். அவர் மட்டுமல்லாமல் அவருடன் அங்கிருந்த சில காவலர்களும் அந்த சிறுமியை பலாத்காரம் செய்துள்ளனர் என தகவல் வெளியாகி உள்ளது. இதனால் கர்ப்பம் அடைந்த சிறுமி காப்பகத்தில் இருந்து வந்துள்ளார். சில நாட்களுக்கு பின் அறிந்த அதிர்ச்சி அடைந்த தலைமை காவலர் சிறுமியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று கருக்கலைப்பு செய்துள்ளார். இந்நிலையில் சிறுமியை கற்பழித்தது மட்டுமல்லாமல் அவர் கர்ப்பம் அடைந்ததை யாருமறியாமல் கருக்கலைப்பு செய்த தலைமை காவலர் மற்றும் அவருடன் சேர்ந்து சில காவலர்கள் மீது தற்போது புகார் அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் காவலர்கள் மீதான தன்னம்பிக்கையும் கெடுக்கும் வகையில் அமைந்துள்ளது.
Published by
Rebekal

Recent Posts

“தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு வெப்பநிலை அதிகரிக்கும்” வானிலை கொடுத்த சூடான அப்டேட்.!

“தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு வெப்பநிலை அதிகரிக்கும்” வானிலை கொடுத்த சூடான அப்டேட்.!

சென்னை : தமிழகத்தில் இன்று (மார்ச் 4) முதல் மார்ச் 8ம் தேதி வரை அதிகபட்ச வெப்ப நிலை இயல்பை…

58 minutes ago

INDvsAUS : 14 ஆண்டு பழிதீர்க்குமா இந்தியா? பேட்டிங்கை தேர்வு செய்த ஆஸ்ரேலியா!

துபாய் : சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இன்று முதல் அரையிறுதி போட்டி துபாய் சர்வதேச…

2 hours ago

இதுதான் தமிழ்நாடு., கல்வி நம் உயிரினும் மேலானது! முதலமைச்சரின் உருக்கமான ‘இரு’ பதிவுகள்!

சென்னை : திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் பகுதியில் அண்ணாநகரை சேர்ந்தவர் சுபலட்சுமி, இவரது கணவர் கிருஷ்ணமூர்த்தி 6 ஆண்டுகளுக்கு முன்னரே…

2 hours ago

ஹெட் விக்கெட் எடுக்கிறது ஈசி இல்லை கண்ணா! இந்தியாவுக்கு சவால் விட்ட ஸ்டிவ் ஸ்மித்!

துபாய் : சாம்பியன்ஸ் டிராபி தொடரின் அரையிறுதி போட்டி இன்று துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெறவிருக்கிறது. இந்த போட்டியை அரையிறுதி…

2 hours ago

சீமான் விவகாரம் : இதுதான் கடைசி? “எனக்கு எந்த நியாயமும் கிடைக்கல.,”  விஜயலட்சுமி பரபரப்பு!

சென்னை : நடிகை விஜயலட்சுமி, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது பாலியல் குற்றசாட்டை முன்வைத்து புகார் அளித்து…

3 hours ago

2026-ல் விஜய் ஆட்சி என்பது பகல் கனவு! முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம்!

சென்னை : நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் கட்சியை தொடங்கி வருகின்ற 2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் போட்டியிடவுள்ளதாக…

4 hours ago