பாலியல் தொல்லை அளித்த மருத்துவர்.. காரில் அவசர சிகிச்சை பிரிவுக்குள் நுழைந்த போலீசார்.!

Published by
கெளதம்

சென்னை:பாலியல் தொல்லை அளித்த மருத்துவரை கைது செய்ய மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவு வரை காரிலேயே சென்ற போலீசாரால் பரபரப்பு.

உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள ரிஷிகேஷ் எய்ம்ஸ் மருத்துவமனையில் பெண் மருத்துவர் ஒருவருக்கு பாலியல் தொல்லை அளித்த மருத்துவர் சதீஷ்குமார் என்பவரை கைது செய்ய, உணர்ச்சிவசப்பட்ட காவல்துறையினர் மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவுக்குள் தங்களது போலீஸ் வாகனத்தை ( xuv ) ஓட்டிச் சென்றதால் பரபரப்பானது.

இப்போது சமூக வலைத்தளங்களில் பரவி வரும் 26 வினாடிகள் கொண்ட வீடியோவில், ஒரு திரைப்படத்தின் காட்சியை போல் அந்த வீடியோ காட்சியளிக்கிறது. அதில், அவசர சிகிச்சைப் பிரிவில் நெரிசலான இடத்தில போலீஸ் கார் செல்வதைக் காட்டுகிறது. அதற்கு அங்கிருக்கும் பாதுகாப்பு அதிகாரிகள் நோயாளிகளை வெளியே கொண்டு செல்லும் ஸ்ட்ரெச்சர்களை நகர்த்தி போலீசாரின் கார் வருகைக்கு உதவி செய்வதைக் காணலாம்.

இவ்வாறு, நோயாளிகளின் படுக்கைகளை அப்புறப்படுத்திவிட்டு, போலீசார் வாகனத்தை ஓட்டி சென்ற சம்பவம் கடும் கண்டனத்துக்குள்ளாகியுள்ளது. குற்றம் சாட்டப்பட்ட நபரைக் கைது செய்ய வேண்டியதன் அவசியம் இருந்தாலும், நோயாளிகள் நிறைந்த அவசர வார்டு வழியாக இது மாதிரியான செயலில் ஈடுபடுவதால் நோயாளிகள் பற்றிய கேள்வி எழும் என்ற விமர்சனத்தை பலர் முன் வைக்கின்றனர்.

இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் தரப்பு கூறுகையில், குற்றம் சாட்டப்பட்ட சதீஷ் குமார், மருத்துவமனையின் ஆபரேஷன் தியேட்டருக்குள் ஒரு பெண் மருத்துவரை துன்புறுத்தியதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், போலீசார் கைது  செய்யப்பட்ட ஒரு நாள் கழித்து, மருத்துவமனை வளாகத்தில் மருத்துவர்கள் போரட்டத்தில் ஈடுட்ட நிலையில், சதீஷ் குமார் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

Published by
கெளதம்

Recent Posts

சம்பவம் செய்யும் வீர தீர சூரன்…வசூல் முதல் ஓடிடி அப்டேட் வரை!

சென்னை : விக்ரம் நடித்த வீர தீர சூரன் திரைப்படம் பெரிய எதிர்பார்புகளுக்கு மத்தியில் கடந்த மார்ச் 27-ஆம் தேதி திரையரங்குகளில்…

43 minutes ago

சுங்கச்சாவடி கட்டண உயர்வு இன்று முதல் அமல்.! வாகன ஓட்டிகள் அதிருப்தி…

சென்னை : தமிழ்நாட்டில் உள்ள 40 சுங்கச்சாவடிகளில் இன்று, அதாவது (ஏப்ரல் 1) முதல் கட்டண உயர்வு அமலுக்கு வந்துள்ளது. …

45 minutes ago

live : தமிழ்நாடு சட்டப்பேரவை முதல்…சுட்டெரிக்கும் வானிலை அப்டேட் வரை!

சென்னை : மூன்று நாட்கள் இடைவெளிக்குப் பிறகு, இன்று, அதாவது 2025 ஏப்ரல் 1 அன்று, தமிழ்நாடு சட்டப்பேரவை மீண்டும்…

1 hour ago

சுற்றுலா பயணிகளே கவனம்! கொடைக்கானலில் இ-பாஸ் நடைமுறை இன்று முதல் அமல்!

சென்னை : கொடைக்கானலில் இ-பாஸ் நடைமுறை இன்று, அதாவது 2025 ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வந்துள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தின்…

2 hours ago

மீண்டும் வாய்ப்பு கிடைத்தால் விண்வெளி செல்வீர்களா? சுனிதா வில்லியம்ஸ் சொன்ன பதில்!

ஃபுளோரிடா : கடந்த 2024 ஜூலை மாதம், ஒரு வார கால ஆராய்ச்சிப் பணிக்காக சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு (ISS)…

3 hours ago

எதுக்கு ஓவர் கொடுக்கவில்லை? அஸ்வினி குமாருக்காக ஹர்திக் பாண்டியாவை வெளுத்து வாங்கும் நெட்டிசன்கள்!

மும்பை :  ஐபிஎல் 2025 சீசனில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) அணிகளுக்கு இடையே மார்ச்…

3 hours ago