திருடும் போது கையில் செருப்பு அணியும் விசித்திர திருடர்கள்.! மத்திய பிரதேசத்தில் வினோதம்.!

Default Image

கையில் செருப்பு மாட்டிகொண்டு திருட்டு சம்பவத்தில் ஈடுப்பட்டு வந்த திருட்டு கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர். 

ஒவ்வொரு திருட்டு கும்பலும் ஒவ்வொரு முறையில் திருட்டை நடத்தும். அப்படி ஒரே விதமாக திருட்டை செய்யும் கும்பல் என்றேனும் ஒருநாள் காவல்துறை வசம் அகப்பட்டு விடும். அப்படி தான் மத்திய பிரதேசத்தில் ஒரு திருட்டு கும்பல் அகப்பட்டுள்ளது.

அதுவும் விசித்திரமான முறையில் திருடி மாட்டிக்கொண்டுள்ளனர். அதாவது , அவர்கள் திருட செல்கையில் காலில் செருப்பு போடுவதற்கு பதில், கையில் செருப்பு மாட்டிக்கொண்டு செல்வார்களாம். அதனால் நாய்கள் தொந்தரவு செய்யாது மேலும், போலீசாரிடம் மாட்டிக்கொள்ள மாட்டார்கள் என்ற நம்பிக்கை கொண்டுள்ளனர்.

இதே போல தொடர்ந்து திருட்டு சம்பவத்தில் ஈடுப்பட்டு வந்ததால், போலீசாரிடம் வசமாக சிக்கியுள்ளது இந்த திருட்டு கும்பல். அவர்களிடம் இருந்து சுமார் 1 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    Leave a Reply

    லேட்டஸ்ட் செய்திகள்