3 பொய்கள் குறித்து பிரதமர் மோடி கருத்து கூறுவாரா? – ப.சிதம்பரம் கேள்வி!

Published by
Surya

புதிய வேளாண் சட்டத்தில் எதிர்க்கட்சிகள் பொய் பரப்புரை செய்வதாக கூறும் பிரதமர், பொய் என்று சொல்லப்படும் 3 விஷயங்கள் குறித்து கருத்து கூறுவாரா? என ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.

மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிராக ஹரியானா, குஜராத், பஞ்சாப், உத்தரப்பிரதேம் உள்ளிட்ட பல மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் ஆயிரக்கணக்கானோர், டெல்லி எல்லையில் போராட்டம் நடத்திக்கொண்டு வருகின்றனர். இதுவரை மத்திய அரசு நடத்திய பேச்சுவார்த்தையில் பலனளிக்கவில்லை. இந்தநிலையில் பிரதமர் மோடி நேற்று மத்திய பிரதேச மாநில விவசாயிகளுடன் காணொளி மூலம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

அப்பொழுது பேசிய அவர், வேளாண் சட்ட விவகாரத்தில் எதிர்க்கட்சியினர் விவசாயிகளை தவறாக வழிநடத்துவதாக குற்றம்சாட்டிய அவர், சீா்திருத்தங்களை மோடி கொண்டு வந்தது எதிா்க்கட்சிகளுக்குப் பிரச்னையாக உள்ளதாகவும், அதற்கான நற்பெயரை தனக்கு கொடுக்க வேண்டாம் என உரையாற்றினார். மேலும் பேசிய அவர், விவசாயிகளை தவறாக வழிநடத்துவதை தவறாக வழிநடத்துவதை எதிா்க்கட்சியினா் நிறுத்த வேண்டும் என்று அந்த உரையில் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதியமைச்சருமான ப.சிதம்பரம், புதிய வேளாண் சட்டத்தில் எதிர்க்கட்சிகள் பொய் பரப்புரை செய்வதாக கூறும் பிரதமர் மோடி, பொய் என்று சொல்லப்படும் 3 விஷயங்கள் குறித்து கருத்து கூறுவாரா? என கேள்வி யெழுப்பியுள்ளார். இதுகுறித்த அவரின் ட்விட்டர் பக்கத்தில், விவசாயிகளின் போராட்டங்களை ஒருங்கிணைக்கும் அகில இந்திய கிசான் சங்கர்ஷ் குழுவினர், குறைந்தபட்ச ஆதரவு விலை ரூ.1,870 என்றாலும் ஒரு குவிண்டால் நெல் ரூ.900-க்கு விற்கப்படுகிறது என்கின்றனரே அது பொய்யா? எனவும் கேள்வியெழுப்பினார்.

அதுமட்டுமின்றி, ஹத்ராஸ் பாலியல் வழக்கில், உயிரிழந்த பட்டியலினப் பெண் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகவில்லை என அம்மாநில காவல் துறை கூறிய நிலையில், அவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டதை சிபிஐ உறுதிசெய்து குற்றப்பத்திரிகை தாக்கல்செய்துள்ளது. இது பொய்யா? எனவும் கேள்வியெழுப்பியுள்ளார்.

Published by
Surya

Recent Posts

கடைசி வரை போராடிய டெல்லி….கடைசி நேரத்தில் த்ரில் வெற்றி பெற்ற கொல்கத்தா!

கடைசி வரை போராடிய டெல்லி….கடைசி நேரத்தில் த்ரில் வெற்றி பெற்ற கொல்கத்தா!

டெல்லி : இன்று டெல்லி அருண் ஜெட்லி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட்…

7 hours ago

சாட்ஜிபிடியை ஓரம் கட்ட ஸ்கெட்ச் போட்ட மார்க் ஜுக்கர்பெர்க்! போட்டியில் களமிறங்கிய Meta AI ஆப்!

மெட்டா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க், இன்று (ஏப்ரல் 29, 2025) ஒரு புதிய Meta AI…

8 hours ago

திணறி கொண்டே அதிரடி காட்டிய கொல்கத்தா…டெல்லிக்கு வைத்த பெரிய டார்கெட்?

டெல்லி : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் மோதுகிறது. இந்த…

9 hours ago

“200 தொகுதிகளுக்கும் மேல் வெல்வோம்” தமிழிசைக்கு பதிலடி கொடுத்த மு.க.ஸ்டாலின்!

சென்னை : இன்று பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த போது திமுக குறித்து விமர்சனம் செய்து…

9 hours ago

என்னுடைய மனைவி தான் தூண்…பத்மபூஷன் விருது வாங்கிய அஜித் எமோஷனல்!

டெல்லி : இந்த ஆண்டுக்கான (2025) பத்ம பூஷன் விருது கடந்த ஜனவரி 25-ஆம் தேதி குடியரசு தினத்தை முன்னிட்டு யாருக்கெல்லாம்…

10 hours ago

KKRvsDC : வெற்றிப்பாதைக்கு திரும்புமா டெல்லி? டாஸ் வென்று பந்துவீச்சு தேர்வு!

டெல்லி : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் மோதுகிறது. இந்த…

11 hours ago