உத்திர பிரதேச மாநிலத்தில் லக்னோ என்ற பகுதியில் பர்கான் என்பவர் வசித்து வந்துள்ளார்.இவருக்கு ஜூன் 21-ம் தேதி சாலை விபத்து ஏற்பட்டுள்ளது.அங்குள்ள நபர்கள் பர்கானை தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
அப்போது இவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.இதை கேட்ட அவரது குடும்பத்தினர் மன வருத்தத்துடன் அவரை கல்லறையில் அடக்கம் செய்ய சென்றுள்ளனர்.
அப்போது கல்லறையை அடைந்தவர்கள் அவரின் உடம்பு அசைவதை கண்டுள்ளனர்.பின்னர் அவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.அப்போது பார்கானின் உடம்பில் உயிர் இருப்பதை மருத்துவர்கள் உறுதி செய்துள்ளனர்.
மேலும் சுமார் 7 லச்சக்கத்திற்கும் அதிகமான பணத்தை செலவு செய்து பார்கானின் உயிரை காப்பாற்றி வருவதாக அவரின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.அவரின் உடம்பில் ரத்த அழுத்தம் சீராக உள்ளதாகவும் மூளை செயல்பாட்டில் உள்ளதாகவும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
இந்நிலையில் கல்லறையில் புதைக்க சென்றவர் உயிர் பிழைத்த சம்பவம் அங்குள்ளவர்களிடையே ஆச்சர்யத்தை அளித்துள்ளது.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…