பெங்களூருவில் ஆன்லைனில் பாதி விலையில் ஐபேட் வாங்க வேண்டுமென்று நினைத்து மோசடி கும்பலிடம் 19 லட்சத்தை இழந்த மருத்துவர் போலீசில் புகார் அளித்துள்ளார்.
தற்போதைய நவீன காலகட்டத்தில் ஆன்லைன் மூலமாக பொருட்களை ஆர்டர் செய்து அமர்ந்த இடத்திலிருந்தே பெற்று கொள்ளும் வாய்ப்புகள் கிடைத்து விட்டதால்,எந்த விலையுயர்ந்த பொருளாக இருந்தாலும் ஆன்லைனில் பணத்தை அனுப்பி வீட்டுக்கு டெலிவரி செய்யும் படியாக வாங்கி கொள்கின்றனர். இது சிலருக்கு சவுகரியமாக இருப்பது போல ஆன்லைன் மோசடி கும்பலுக்கும் மிக சவுகரியமாக போய்விட்டது.
பெங்களூருவில் உள்ள மருத்துவர் ஒருவர் ஐபேட் வாங்க ஆசைப்பட்டுள்ளார். அவர் ஆசைப்பட்ட ஐபேட் புதியதாக இந்தியாவில் வாங்கினால் 80,000 செலவாகும். ஆனால், ஆன்லைனில் அதே ஐபேட் 45,000 துபாயிலிருந்து கிடைக்கும் என்ற விளம்பரத்தை பார்த்து குயிக்கரில் ஆர்டர் செய்துள்ளாதாக கூறப்படுகிறது. ஆனால், ஐபேட் வரவில்லை, மாறாக சில வரிகள் உள்ளது என காரணம் காட்டி மேலும் பணம் பெறப்பட்டுள்ளது. மீண்டும், அவருக்கு குறைந்த விலையில் 5 ஐபேட் மற்றும் 5 கடிகாரங்கள், 2 மடிக்கணினி வழங்கப்படும் என கூறப்பட்டதை அடுத்து, ஆசையில் மருத்துவர் மறுபடியும் அதே ஆன்லைன் பக்கத்தில் 19.2 லட்சத்தை அனுப்பி மொத்தமாக வாங்குவோம் என நினைத்துள்ளார்.
ஆனால், பணத்தை பெற்றுக்கொண்ட மோசடி கும்பல் அதன் பின் எந்த பதிலும் அளிக்கவில்லை, பொருளும் அனுப்பப்படவில்லை. ஏமாற்றப்பட்டதை உணர்ந்த மருத்துவர் பெங்களூர் மாகதி சாலை போலீசில் புகார் அளித்துள்ளார், போலீசார் இந்த ஆன்லைன் மோசடி குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆன்லைனில் பொருட்கள் வாங்குவது தவறல்ல, அதிகம் ஆசைப்பட்டு குறைந்த விலையில் நிறைவான பொருள் கிடைக்கும் என நம்புவது தான் தவறு. இது போன்ற ஆன்லைன் மோசடி கும்பல் பெருகி வருவதால் கவனமுடன் செயல்படுவது நமது கடமை.
மும்பை : மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் 2025 - இன் 45வது…
குரும்பபாளையம் : கோவையில் நேற்றைய தினத்தை தொடர்ந்து, இன்றும் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக (தவெக) பூத் கமிட்டி கருத்தரங்கம்,…
சரவணம்பட்டி : கோவையில் 2ஆம் நாளாக இன்று (ஏப்.27) தவெக வாக்குச்சாவடி முகவர்கள் கருத்தரங்கு நடைபெறுகிறது. குரும்பபாளையத்தில் உள்ள கல்லூரி…
கோவை : தவெக தலைவர் விஜய், கோவையில் இன்று இரண்டாவது நாளாக ரோட் ஷோவில் ஈடுபட்டுள்ளார். சரவணம்பட்டியில் நேற்று பூத்…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 45வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு…
ராவல்பிண்டி : 26 பேர் கொல்லப்பட்ட பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா தொடர்ச்சியான எதிர் நடவடிக்கைகளை…