ஆன்லைனில் பீர் ஆர்டர் செய்து ரூ.1.50 லட்சத்தை இழந்த நபர்…!

Published by
லீனா

55 வயதான நபர் ஒருவர் ஆன்லைனி பீர் ஆர்டர் செய்ததன் மூலம், அவரது வங்கி கணக்கில் இருந்து, ரூ.1.50 லட்சம் திருடப்பட்டுள்ளது.  

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருவதை அடுத்து பல இடங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை இணையத்தில் ஆர்டர் செய்து பெற்றுக் கொள்கின்றனர். அந்த வகையில், புனேயில் 55 வயதான நபர் ஒருவர் ஆன்லைனில் பீர் ஆர்டர் செய்ததன் மூலம், அவரது வங்கி கணக்கில் இருந்து, ரூ.1.50 லட்சம் திருடப்பட்டுள்ளது.

இதுகுறித்து, புனே காவல்துறையின் சைபர் செல் காவல்துறை துணை ஆய்வாளர் ரவீந்திர காவரி கூறுகையில், ‘ஊரடங்கு காரணமாக மதுபான கடைகள் திறக்கப்படாத காரணத்தினால், புனேயில், 55 வயதான நபர் ஒருவர், ஆன்லைனில் பீர் வாங்குவதற்கான தேடலின் போது ஒரு எண்ணை கண்டுபிடித்துள்ளார். பின் அந்த எண்ணை தொடர்பு கொண்டு அவரை அழைத்தபோது,  அவரை ரூ.10 செலுத்தும்படி கேட்டுக் கொண்டனர். இதனையடுத்து அவர் ரூ.10 அனுப்பியுள்ளார்.

பின் ஒரு லிங்கை அனுப்பி, அந்த செயலியை பதிவிறக்கம் செய்யுமாறு கேட்டுக் கொண்டார். அவர் சற்றும் சந்தேகப்படாமல், அந்த செயலியை பதிவிறக்கம் செய்துள்ளார். இதன் மூலம் ஆன்லைனில் பீர் ஆர்டர் செய்தவரின் ஸ்மார்ட்போனை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

அதனைத் தொடர்ந்து பீர் ஆர்டர் செய்தவரின், வங்கி தொடர்பான சான்றுகள் மற்றும் கடவுச்சொற்கள் ஆகியவற்றை பெற்றுக் கொண்டு, அந்த நபரின் கணக்கில் இருந்து 1.50 லட்சத்தையும் திருடி உள்ளார். இதனையடுத்து புகார்தாரர் உடனடியாக ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரி நண்பர்களில் ஒருவரை அழைத்து நடந்ததை கூறியுள்ளார்.

பணத்தை இழந்த நபர் புகாரளிக்க காவல் நிலையத்திற்கு வந்தார். நாங்கள் உடனடியாக பரிவர்த்தனை செய்யப்பட்ட செய்தியை சரிபார்த்து விட்டு, ஈ-காமர்ஸ் நிறுவனத்தின் குறிப்பை கண்டுபிடித்தோம். பல்வேறு மாநிலங்களில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெற்றால் ‘ஸ்டாப் பேங்கிங் மோசடி’ என்ற குழுவை அணுகி, சந்தேகத்திற்குரிய பரிவர்த்தனை பற்றிய தகவல்களை பகிர்ந்து கொள்வோம். இதன் மூலம், அவர்கள் மோசடி செய்பவர்களின் வங்கி கணக்கிற்கு பணம் செல்வதை தடுத்து நிறுத்துவர் என்று கூறியுள்ளார்.

தற்போது இந்த குழுவின் மூலம் பீர் ஆர்டர் செய்தவரிடம் மோசடி செய்யப்பட்ட பணம், மோசடி செய்தவரின் வங்கி கணக்கிற்கு செல்லாமல் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. மேலும், பீர் ஆர்டர் செய்தவரின் கணக்கில் பணத்தை மீண்டும்  கொண்டு வருவதற்கான சட்ட நடவடிக்கைகள் நடந்து கொண்டிருக்கின்றன. மேலும் ஒரு வாரத்தில் அந்த நிதி அவரது வங்கி கணக்கிற்கு திருப்பித் தரப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Published by
லீனா

Recent Posts

நடிகை வழக்கில் தொண்டர்கள் திரள் நடுவில் காவல் நிலையத்தில் சீமான் ஆஜர்! 

நடிகை வழக்கில் தொண்டர்கள் திரள் நடுவில் காவல் நிலையத்தில் சீமான் ஆஜர்!

சென்னை : நடிகை விஜயலட்சுமி அளித்த பாலியல் புகாரின் பெயரில் பதியப்பட்ட வழக்குகளை முடித்து வைக்க வேண்டும் என சென்னை…

4 hours ago

சிறுமி மீது தவறு? சர்ச்சை பேச்சு எதிரொலி.! மயிலாடுதுறை ஆட்சியர் அதிரடி மாற்றம்!

மயிலாடுதுறை : கடந்த பிப்ரவரி 24-ம் தேதி மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பகுதியில் செயல்பட்டு வந்த அங்கன்வாடியில் பயின்று வந்த…

6 hours ago

தெறிக்கவிடலாமா.? GBU தரமான சம்பவம்., அஜித் ரசிகர்கள் கொண்டாட்டம்! டீசர் வீடியோ இதோ…

சென்னை : நடிகர் அஜித்குமார் நடிப்பில் வரும் ஏப்ரல் 10ஆம் தேதி வெளியாகி உள்ள திரைப்படம் குட் பேட் அக்லி.…

8 hours ago

AFGvAUS : 274 டார்கெட்., பவுலிங்கில் மிரட்டிய ஆஸ்திரேலியா! நிலைத்து ஆடிய ஆப்கானிஸ்தான்!

லாகூர் : சாம்பியன்ஸ் டிராபி தொடரின் 10வது போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் இன்று விளையாடுகின்றன. இந்தப் போட்டி…

9 hours ago

“கைதுக்கு நான் பயப்படவில்லை. இப்போதே விசாரணைக்கு தயார்” சீமான் பரபரப்பு பேட்டி!

சென்னை : நடிகை விஜயலட்சுமி அளித்த பாலியல் வழக்கில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் விசாரணைக்கு நேரில் ஆஜராக…

9 hours ago

“விருப்பமில்லாமல் செய்தால் தான் அது பாலியல் வன்கொடுமை” சீமான் மீண்டும் சர்ச்சை பேச்சு!

தருமபுரி : நடிகை விஜயலட்சுமி, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது பாலியல் வழக்கு பதிவு செய்திருந்தார். இந்த…

12 hours ago