நாயின் மீது காரினை ஏற்றி கொல்லும் நபர்.! வைராலாகும் சிசிடிவி காட்சிகள்.!

Published by
Ragi

பஞ்சாபில் உள்ள ஒரு நபர் தனது காரினை கொண்டு நாயின் மீது ஏற்றி கொல்லும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

பஞ்சாப் மாநிலத்தில் உள்ள கபூர்தலாவில் ஒரு நபர் தனது காரினை கொண்டு நாயின் மீது ஏற்றி இறக்கி கொல்லும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அதன் சிசிடிவி காட்சிகளை பாராளுமன்ற உறுப்பினரும், விலங்கு உரிமை ஆர்வலருமான மேக்னா காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். முகத்தை மறைத்து கொண்டு நாயினை தனது கார் நிற்கும் இடத்திலிருந்து சிறிது தொலைவில் வைத்து அந்த நபர் காரினை கொண்டு அந்த நாயின் மீது ஏற்றி இறக்குகிறார்.காயமடைந்த  நாய் வலியில் அவ்விடத்திலிருந்து ஒடி, அடுத்த 30 நிமிடங்களில் உயிரிழந்ததாக அப்பகுதி மக்கள் கூறியுள்ளனர்.

சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை நடத்தி வந்த பீப்பிள் ஃபார் அனிமல்ஸ்(PFA) என்ற அமைப்பு காரின் நம்பரை வைத்து அந்த நபரை கண்டுபிடித்துள்ளனர். அவர் கபூர்தலாவின் டண்டுபூர் கிராமத்தில் வசிக்கும் குரிந்தர் சிங் என்றும், அவர் நாய்களை விற்பவரும், வளர்பவரும், பின் நாய்களை கூண்டுகளில் வைத்து சண்டைகளுக்கு பயன்படுத்துவார் என்று தெரிய வந்தது. அதனையடுத்து பிஎஃப்ஏ அதிகாரிகள் அளித்த புகாரின் பேரில் அவர் மீது FIR பதிவு செய்யப்பட்டது. அதனையடுத்து செவ்வாய்க்கிழமை குற்றச்சாட்டப்பட்டவரின் வீட்டிற்கு சென்ற பார்த்த போது அவர் வீட்டில் இல்லையாம். அதனையடுத்து கூண்டுக்குள் அடைக்கப்பட்டிருந்த நாய்களை பிஎஃப்ஏ அதிகாரிகள் மீட்டனர் . குற்றசாட்டப்பட்ட நபர் விரைவில் கைது செய்யப்படுவார் என்று போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Recent Posts

MI vs LSG: பவுலிங்கில் மிரட்டிய பும்ரா.., திணறிய லக்னோ.! மும்பை அணி அபார வெற்றி.!

MI vs LSG: பவுலிங்கில் மிரட்டிய பும்ரா.., திணறிய லக்னோ.! மும்பை அணி அபார வெற்றி.!

மும்பை : மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் 2025 - இன் 45வது…

10 hours ago

”தவெக ஆட்சியில் ஊழல் இருக்காது.,, சிறுவாணி தண்ணீர் போல ஆட்சியை அமைப்போம்” – விஜய்.!

குரும்பபாளையம் : கோவையில் நேற்றைய தினத்தை தொடர்ந்து, இன்றும் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக (தவெக) பூத் கமிட்டி கருத்தரங்கம்,…

10 hours ago

“புரட்சி உருவாகிக் கொண்டிருக்கிறது.., தேர்தல் முகவர்கள் சக்தி வாய்ந்தவர்கள்” – ஆதவ் அர்ஜுனா.!

சரவணம்பட்டி : கோவையில் 2ஆம் நாளாக இன்று (ஏப்.27) தவெக வாக்குச்சாவடி முகவர்கள் கருத்தரங்கு நடைபெறுகிறது. குரும்பபாளையத்தில் உள்ள கல்லூரி…

11 hours ago

கோவையே அதிருது.., “யாரையும் பணம் கொடுத்து கூப்பிடவில்லை” – என்.ஆனந்த்.!

கோவை : தவெக தலைவர் விஜய், கோவையில் இன்று இரண்டாவது நாளாக ரோட் ஷோவில் ஈடுபட்டுள்ளார். சரவணம்பட்டியில் நேற்று பூத்…

11 hours ago

MIv s LSG: ரிக்கல்டன் – சூர்யகுமாரின் வெறித்தனமான ஆட்டம்.., மிரண்டு போன லக்னோவுக்கு பெரிய இலக்கு.!

மும்பை : ஐபிஎல் 2025 இன் 45வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு…

12 hours ago

“இந்தியாவை தாக்க 130 அணுகுண்டுகள் தயார்” – பாகிஸ்தான் அமைச்சர் பரபரப்பு எச்சரிகை.!

ராவல்பிண்டி : 26 பேர் கொல்லப்பட்ட பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா தொடர்ச்சியான எதிர் நடவடிக்கைகளை…

13 hours ago