தடுப்பூசிக்கு பயந்து ஆதார் அட்டையுடன் மரத்தின் மேல் ஏறிய நபர்…!

Published by
லீனா

கன்வர்லால் என்பவர், தடுப்பூசிக்கு பயந்து ஆதார் அட்டையுடன் மரத்தின் மேல் ஏறியுள்ளார்.

மத்திய பிரதேசத்தின் ராஜ்கர் மாவட்டத்தின் படங்கலன் கிராமத்தில், கொரோனா தடுப்பூசி முகாம் நடத்துவதற்காக சுகாதாரத்துறை அந்த கிராமத்திற்கு சென்று உள்ளது. இதனையடுத்து கிராம மக்கள் அனைவரும் தடுப்பூசி மையத்திற்கு வருமாறு அழைக்கப்பட்டனர். அந்த கிராமத்தில் வசிக்கும் கன்வர்லால் என்பவர் தடுப்பூசி முகாமிற்கு சென்றுள்ளார்.

ஆனால் தடுப்பூசி வழங்கப்படுவதை கண்ட தடுப்பூசி செலுத்திக் கொள்ள மறுத்துவிட்டார். மேலும் அவருக்கு தடுப்பூசி செலுத்த பயம் என்பதால், தடுப்பூசி மையத்திற்கு அருகில் உள்ள மரத்தில் ஏறி தடுப்பூசி முகாம் முடியும் வரை அங்கேயே இருந்துள்ளார். அவரது மனைவி தடுப்புசி எடுத்த ஒப்புக்கொண்ட போதிலும்,  அவர் தன்னுடைய ஆதரட்டையை மட்டுமல்லாது, தனது மனைவியின் ஆதார் அட்டையையும் எடுத்துச் சென்றுள்ளார்.

இதனையடுத்து இந்த சம்பவம் கேள்விப்பட்ட பின், குஜ்னர் தடுப்பு மருத்துவ அதிகாரி டாக்டர் ராஜீவ் கிராமத்திற்கு சென்று அவருடன் பேசி அவருக்கான ஆலோசனை வழங்கினார். மேலும் இதுகுறித்து டாக்டர் ராஜீவ் கூறுகையில், ஆலோசனைக்குப் பின் அவருடைய தடுப்பூசி குறித்த பயம் நீங்கி விட்டது. அடுத்த முறை அவர்களது கிராமத்தில் தடுப்பூசி முகாம் நடத்தப்படும் போது, கன்வர்லால்  மற்றும் அவரது மனைவி தடுப்பூசி போடுவார்கள் என தெரிவித்துள்ளார்.

Published by
லீனா

Recent Posts

“தமிழ் ஐசியூ-ல இருக்கு .. உங்கள கெஞ்சி கேக்குறேன்” செல்வராகனின் உருக்கமான வீடியோ.!

“தமிழ் ஐசியூ-ல இருக்கு .. உங்கள கெஞ்சி கேக்குறேன்” செல்வராகனின் உருக்கமான வீடியோ.!

சென்னை : இயக்குனர் செல்வராகவன் அவ்வப்போது முக்கிய அறிவுரைகளை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவாக வெளியிட்டு வருகிறார். அந்த வகையில்,…

6 hours ago

குழந்தைகள் ஆபாச பட விவகாரம்.! உயர்நீதிமன்றத்திற்கு ‘குட்டு’ வைத்த உச்சநீதிமன்றம்.!

டெல்லி : சென்னை காவல் நிலையத்தில் ஓர் இளைஞர் தனது போனில் குழந்தைகள் தொடர்பான ஆபாச படங்களை வைத்திருந்ததாக கூறி…

6 hours ago

புரட்டாசி மாதம் பெருமாளுக்கு தளிகை போட காரணம் என்ன தெரியுமா?.

சென்னை -தளிகை என்றால் என்ன ,பெருமாளுக்கு தளிகை எவ்வாறு வைப்பது என்பதை பற்றி இந்த ஆன்மீகக் குறிப்பில் அறிந்து கொள்ளலாம்.…

6 hours ago

ஐபிஎல் 2025 : இந்த 5 வீரர்களை தக்க வைத்த சிஎஸ்கே! வெளியான தகவல்!

சென்னை : அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் என்பது இந்த ஆண்டு நவம்பர் அல்லது டிசம்பர்…

6 hours ago

ஆணாதிக்கத்தை சமூக நையாண்டியுடன் பேசும் ‘லாப்பத்தா லேடீஸ்’.!

சென்னை : 2025 ஆஸ்கரில் 'சிறந்த வெளிநாட்டு படங்கள்' பிரிவில் போட்டியிடுவதற்காக இந்தியாவில் இருந்து அதிகாரப்பூர்வ தேர்வாக, இயக்குநர் கிரண்…

7 hours ago

மக்களே! தமிழகத்தில் (24.09.2024) செவ்வாய்க்கிழமை இங்கெல்லாம் மின்தடை!

சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 24.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…

7 hours ago