மத்திய பிரதேச மாநிலத்தில் கடை உரிமையாளரின் அனுமதியின்றி சமோசாவை எடுத்து சாப்பிட்ட நபர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
மத்திய பிரதேச மாநிலம் சோலா பகுதியில் உள்ள சங்கர் நகரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை 40 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் குடிபோதையில் கடைக்குள் நுழைந்து உரிமையாளரின் அனுமதியின்றி சமோசா எடுத்து சாப்பிட்டுள்ளார். இதனால் கடை உரிமையாளர் தாக்கிய நிலையில் அவர் உயிரிழந்துள்ளார்.
இது தொடர்பாக சோலா மந்திர் காவல் நிலையப் பொறுப்பாளர் அணில் சிங் மவுரியா கூறுகையில், ஞாயிற்றுக்கிழமை மாலை தலைநகர் சோலா பகுதியில் உள்ள சங்கர் நகரில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. உயிரிழந்த நபர் வினோத் என அடையாளம் காணப்பட்டுள்ளது.
வினோத் குடிபோதையில் கடைக்குள் நுழைந்து சமோசாவை எடுத்து சாப்பிட ஆரம்பித்துள்ளார். இதனையடுத்து உரிமையாளர் அவரை திட்டியுள்ளார். பின்னர் ஒரு குச்சியால் தலையில் அடித்துள்ளார். இதனையடுத்து அவர் இறந்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக கடை உரிமையாளர் மற்றும் அவரது 20 வயது மகன் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…