Categories: இந்தியா

கடை உரிமையாளரின் அனுமதியின் சமோசாவை எடுத்து சாப்பிட்ட நபர் உயிரிழப்பு..! பின்னணி என்ன..?

Published by
லீனா

மத்திய பிரதேச மாநிலத்தில் கடை உரிமையாளரின் அனுமதியின்றி சமோசாவை எடுத்து சாப்பிட்ட நபர் கொலை செய்யப்பட்டுள்ளார்.  

மத்திய பிரதேச மாநிலம் சோலா பகுதியில் உள்ள சங்கர் நகரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை 40 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் குடிபோதையில் கடைக்குள் நுழைந்து உரிமையாளரின் அனுமதியின்றி சமோசா எடுத்து சாப்பிட்டுள்ளார். இதனால் கடை உரிமையாளர் தாக்கிய நிலையில் அவர் உயிரிழந்துள்ளார்.

இது தொடர்பாக சோலா மந்திர் காவல் நிலையப் பொறுப்பாளர் அணில் சிங் மவுரியா கூறுகையில், ஞாயிற்றுக்கிழமை மாலை தலைநகர் சோலா பகுதியில் உள்ள சங்கர் நகரில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. உயிரிழந்த நபர் வினோத் என அடையாளம் காணப்பட்டுள்ளது.

வினோத் குடிபோதையில் கடைக்குள் நுழைந்து சமோசாவை எடுத்து சாப்பிட ஆரம்பித்துள்ளார். இதனையடுத்து உரிமையாளர் அவரை திட்டியுள்ளார். பின்னர் ஒரு குச்சியால் தலையில் அடித்துள்ளார். இதனையடுத்து அவர் இறந்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக கடை உரிமையாளர் மற்றும் அவரது 20 வயது மகன் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

Recent Posts

சற்று ஆறுதல் அளிக்கும் தங்கம் விலை… சவரனுக்கு ரூ.680 குறைவு!

சற்று ஆறுதல் அளிக்கும் தங்கம் விலை… சவரனுக்கு ரூ.680 குறைவு!

சென்னை : சென்னையில் கடந்த சில நாட்களாக தொடர் உச்சம் கண்டு வந்த தங்கம் விலை, இன்று சற்று ஆறுதல்…

9 minutes ago

“வம்பிழுக்கும் வீணர்கள் தெம்பிழந்து ஓடுவார்கள்” மு.க.ஸ்டாலின் சூளுரை!

சென்னை : இன்று மறைந்த முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணா எனும் சி.என்.அண்ணாதுரை அவர்களின் 56வது நினைவு தினத்தை முன்னிட்டு…

1 hour ago

திருப்பரங்குன்றம் பதற்றம்.., இன்றும் நாளையும் மதுரையில் 144 தடை!

மதுரை : இந்து கடவுள் முருகனின் அறுபடைவீடுகளில் முதல் வீடாக பார்க்கப்படுவது மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் உள்ள முருகன் கோயில்.…

2 hours ago

LIVE : அண்ணா நினைவு நாள் நிகழ்வுகள் முதல்.., இறுதிக்கட்ட பிரச்சார நிகழ்வுகள் வரை..,

சென்னை : இன்று (பிப்ரவரி 3) மறைந்த முன்னாள் முதலமைச்சர் அறிஞர் அண்ணா நினைவு தினத்தை முன்னிட்டு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,…

2 hours ago

குகேஷை வீழ்த்தி டாடா ஸ்டீல்ஸ் செஸ் தொடரை வென்றார் பிரக்ஞானந்தா.!

நெதர்லாந்து: டாடா ஸ்டீல் மாஸ்டர்ஸ் செஸ் போட்டியில் உலக சாம்பியனான குகேஷை 2-1 என்ற கணக்கில் டைபிரேக்கரில் வீழ்த்தி கிராண்ட்மாஸ்டர்…

3 hours ago

இங்கிலாந்தை 150 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி அசத்தல்.!

மும்பை : கடைசி டி20 போட்டியில் இங்கிலாந்து அணியை 150 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய…

4 hours ago