விமானத்தில் நடுவானில் பயணிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட, முதலுதவி சிகிச்சை அளித்த தமிழிசை சௌந்தரராஜன்.
தெலுங்கானா ஆளுநரும், புதுச்சேரி துணைநிலை ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள் இன்று காலை 3 மணியளவில் டெல்லியில் இருந்து ஹைதராபாத் செல்வதற்காக விமானத்தில் பயணம் மேற்கொண்டுள்ளார். அப்போது நடுவானில் சென்று கொண்டிருந்த நிலையில், சக பயணி ஒருவர் மயங்கிய நிலையில் இருந்துள்ளார்.
அப்போது யாராவது மருத்துவர் இருக்கிறீர்களா என்று விமான பணிப்பெண் அறிவிப்பு விடுத்துள்ளார். அப்போது தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள், விசாரித்து உடனே சென்று பார்த்தபோது அப்பயணிக்கு உடம்பெல்லாம் வியர்த்து மயங்கி நிலையில் இருந்துள்ளார்.
உடனடியாக தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள் முதலுதவி சிகிச்சை அளித்துள்ளார். அவர் கண்விழித்ததும் அவர் அருகிலேயே அமர்ந்து தமிழிசை சௌந்தரராஜன் பயணம் மேற்கொண்டுள்ளார். பின் அந்த பயணிக்கு ஏற்ற நேரத்தில் உதவ, உதவிய விமான பணிப்பெண்ணுக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…