விமானத்தில் மயங்கி விழுந்த பயணி..! முதலுதவி சிகிச்சை அளித்த தெலுங்கானா ஆளுநர் தமிழிசை..!

Default Image

விமானத்தில் நடுவானில் பயணிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட, முதலுதவி சிகிச்சை அளித்த தமிழிசை சௌந்தரராஜன். 

தெலுங்கானா ஆளுநரும், புதுச்சேரி துணைநிலை ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள் இன்று காலை 3 மணியளவில் டெல்லியில் இருந்து ஹைதராபாத் செல்வதற்காக விமானத்தில் பயணம் மேற்கொண்டுள்ளார். அப்போது நடுவானில் சென்று கொண்டிருந்த நிலையில், சக பயணி ஒருவர் மயங்கிய நிலையில் இருந்துள்ளார்.

அப்போது யாராவது மருத்துவர் இருக்கிறீர்களா என்று  விமான பணிப்பெண் அறிவிப்பு விடுத்துள்ளார். அப்போது தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள், விசாரித்து உடனே சென்று பார்த்தபோது அப்பயணிக்கு உடம்பெல்லாம் வியர்த்து மயங்கி நிலையில் இருந்துள்ளார்.

உடனடியாக தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள் முதலுதவி சிகிச்சை அளித்துள்ளார். அவர் கண்விழித்ததும் அவர் அருகிலேயே அமர்ந்து தமிழிசை சௌந்தரராஜன் பயணம் மேற்கொண்டுள்ளார். பின் அந்த பயணிக்கு ஏற்ற நேரத்தில் உதவ, உதவிய விமான பணிப்பெண்ணுக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்