பாஜகவில் இருந்து காங்கிரஸ் கட்சியில் இணைந்த ஜெகதீஷ் ஷெட்டருக்கு ஹூப்ளி தொகுதியை ஒதுக்கியது கட்சி தலைமை.
கர்நாடகா சட்டசபை தேர்தல் களம் நாளுக்கு நாள் பரபரப்பாகி கொண்டே செல்கிறது திரைப்படங்களில் கூட இல்லாத அளவுக்கு பல திருப்பங்களை தினம் தினம் சந்தித்து வருகிறது . தேர்தலில் போட்டியிட சீட் கிடைக்காததால் பிரதான கட்சி முக்கிய தலைவர்கள் கூட பிற கட்சிக்கு தாவி வருகின்றனர். அவர்களுக்கும் அந்த கட்சி சீட் வழங்கி வருகிறது.
அப்படி தான் பாஜகவை சேர்ந்த கர்நாடக முன்னாள் முதல்வராக இருந்த ஜெகதீஸ் ஷெட்டருக்கு கட்சி தலைமை சீட் வழங்க மறுத்துவிட்டது. 6 முறை எம்எல்ஏ, மாநில தலைமை, முன்னாள் முதல்வர் தகுதி என இவ்வளவு இருந்தும் வாய்ப்பு மறுக்கப்பட்டதால், ஷெட்டர் காங்கிரஸ் கட்சியில் தன்னை இணைத்து கொண்டார்.
ஷெட்டர் காங்கிரஸ் கட்சியில் இணைந்த பிறகு, கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் டிகே.செல்வக்குமார் கூறுகையில், காங்கிரஸ் கட்சியில் ஒரு உறுப்பினராக மட்டுமே ஜெகதீஸ் ஷெட்டர் செயல்படுவார் என கூறினார். அவருக்கு தற்போது, காங்கிரஸ் கட்சி ஹூப்ளி சட்டமன்ற தொகுதியை ஒதுக்கியுள்ளது. அவரை எதிர்த்து பாஜக சார்பில் மகேஷ் தென்கினகாய் போட்டியிட உள்ளார்.
சென்னை : டிடி தமிழ் அலுவலகத்தில் “இந்தி மாதக் கொண்டாட்டங்களின் நிறைவு விழா” மிகப்பெரிய எதிர்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்று வருகிறது.…
சென்னை : டிடி தமிழ் அலுவலகத்தில் “இந்தி மாதக் கொண்டாட்டங்களின் நிறைவு விழா” நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் சிறப்பு…
சென்னை : பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கி விட்டது என்றாலே அந்த நிகழ்ச்சி பற்றிய விஷயங்கள் தினம் தினம் தலைப்பு…
சென்னை : தொலைக்காட்சி நிலையத்தின் "இந்தி மாதக் கொண்டாட்டங்களின் நிறைவு விழா" மற்றும் சென்னைத் தொலைக்காட்சியின் பொன்விழா கொண்டாட்டங்கள் இன்று…
சேலம் : தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு விக்கிரவாண்டி பகுதியில் வரும் அக்டோபர் 27-ஆம் தேதி நடைபெற…
சென்னை : வங்க கடலில் இதற்கு முன்னர் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று அதிகாலை கரையைக் கடந்தது.…