கடந்த மாதம் 21-ம் தேதி மஹாராஷ்டிராவில் சட்டப்பேரவை தேர்தல் நடந்து முடிந்தது. மஹாராஷ்டிராவில் ஆட்சி அமைக்க 145 இடங்கள் தேவைபட்டது . கூட்டணி கட்சிகளான பாஜக , சிவசேனா 161 இடங்களில் வெற்றி பெற்றது.
இந்த இரண்டு கூட்டணி கட்சிகளுக்கு இடையே அதிகார பகிர்வில் மோதல் ஏற்பட்டது. இதை தொடர்ந்து எந்த கட்சியும் ஆட்சி அமைக்க பெருபான்மை இல்லாததால் எந்த கட்சியும் முடியாமல் போனது. பின்னர் மஹாராஷ்டிராவில் கடந்த 12-ம் தேதி ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது.
இந்நிலையில் பாஜக உடனான கூட்டணியை சிவசேனா முறித்து கொண்டு சிவசேனா தனது தலைமையில் புதிய ஆட்சி அமைக்க காங்கிரஸ், தேசியவாத காங்கிரசு உடன் பேச்சு வார்த்தை நடத்தியது.
நேற்று மாலை மும்பையில் உள்ள நேரு அரங்கத்தில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரசு மற்றும் சிவசேனா தலைவர்களும் ஆட்சி அமைப்பது குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்திற்கு பிறகு பேசிய தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் , சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே தலைமையில் புதிய அரசு அமைக்க மூன்று கட்சிகளுக்கும் ஒருமித்த கருத்து ஏற்பட்டு உள்ளது என கூறினார்.
இந்நிலையில் இன்று காலை மஹாராஷ்டிராவில் ஒரு திடீர் திருப்பம் ஏற்பட்டது. முதலமைச்சராக தேவேந்திர பட்னாவிஸ் மற்றும் துணை முதலமைச்சராக அஜித் பவார் இன்று காலை மஹாராஷ்டிரா ஆளுநர் முன் பதவியேற்று கொண்டனர்.இதற்கு தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவர் பிரபுல் பட்டேல் “இது எங்கள் கட்சியின் முடிவல்ல. இதற்கு சரத் பவாரின் ஆதரவு இல்லை ” என கூறினார்.
இந்நிலையில், சரத்பவாரின் மகள் சுப்ரியா சுலே தனது வாட்ஸ் அப் ஸ்டேட்டஸில் , கட்சியும், குடும்பமும் பிளவுபட்டு விட்டது என பதிவிட்டு உள்ளார்.
டெல்லி : இன்று இந்திய ரயில்வே துறையின் சார்பாக காலியாக உள்ள 32,438 RRB லோகோ பைலட் பணியிடங்களுக்கு தேர்வு…
சென்னை : பெருநகர சென்னை மாநகராட்சியின் 2025-26ஆம் நிதியாண்டிற்கான பட்ஜெட்டை மேயர் பிரியா இன்று (மார்ச்19) தாக்கல் செய்தார். சென்னை…
சென்னை : தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான விவாதத்திற்கான கூட்டத்தொடர் திங்கள் முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் உறுப்பினர்கள்…
ஃபுளோரிடா : சர்வதேச விண்வெளி நிலையத்தில் 286 நாட்கள் சிக்கித் தவித்த சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் ஆகியோர் ஸ்பேஸ்…
சென்னை : கடந்த வருடம் ஜூன் மாதம் 5ஆம் தேதி ஸ்டார்லைனர் விண்கலம் மூலம் சர்வதேச விண்வெளி மையத்திற்கு ஆய்வு…
வாஷிங்டன் : ரஷ்யா உக்ரைன் போரானது நீண்ட மாதங்களான தொடர்ந்து நடைபெற்று வருகிறது. குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் ரஷ்யா,…