இன்று தொடங்கும் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர்!

Published by
Edison

டெல்லி:2022-23 நிதி ஆண்டுக்கான நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் குடியரசுத் தலைவர் உரையுடன் இன்று தொடங்குகிறது.

2022-23 ஆம் நிதியாண்டுக்கான நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் இரண்டு கட்டங்களாக நடைபெறுகிறது.அதன்படி,நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் பகுதி இன்று (ஜன. 31) தொடங்கி பிப். 11 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. அந்த  வகையில்,தொடக்க நாளான இன்று காலை 11 மணிக்கு இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தொடரில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையாற்றுகிறார்.அவரின் உரையில்,கடந்த ஆண்டில் மத்திய அரசு செயல்படுத்திய சாதனைகள் அனைத்தும் இடம்பெறும்.மேலும்,வருகின்ற நிதி ஆண்டில் மத்திய அரசு செயல்படுத்தவுள்ள உத்தேசித்துள்ள திட்டங்கள் குறித்த விவரங்களும் இடம்பெறுவதாக கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பொருளாதார ஆய்வறிக்கையை தாக்கல் செய்யவுள்ளார்.இதனையடுத்து,நாளை (பிப்ரவரி 1 ஆம் தேதி) காலை 11 மணிக்கு 2022-23 ஆம் நிதி ஆண்டுக்கான (காகிதம் இல்லாத வகையில் டிஜிட்டல் முறையில்)பட்ஜெட்டை மத்திய நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யவுள்ளார்.அதன்பின்னர்,பிப். 2 ஆம் தேதி முதல் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம் நடைபெறும்.

இதற்கிடையில்,இன்று (ஜனவரி 31) மற்றும் பிப்ரவரி 1 ஆகிய தேதிகளில் உடனடிக் கேள்வி நேரம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.ஆனால்,உடனடிக் கேள்வி நேரத்தில் எழுப்பும் விவகாரங்கள் தொடர்பாக பிப்.2 ஆம் தேதி முதல் எடுத்துக் கொள்ளப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து,இரண்டாம் கட்டட கூட்டத்தொடர் மார்ச் 14 ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 8 ஆம் தேதி வரையும் நடைபெறவுள்ளது.பட்ஜெட் கூட்டத் தொடரின் இறுதியில் இரு அவைகளின் கூட்டு கூட்டத்தில் பிரதமரின் நன்றி தெரிவிக்கும் நிகழ்வு நடைபெறவுள்ளது.

இதனிடையே,பெகாசஸ் உளவு விவகாரம் தொடர்பாக மீண்டும் சர்ச்சை எழுந்துள்ளதால்,இது குறித்தும் மற்றும் விவசாய நெருக்கடிகள்,கொரோனா 3 வது அலை,சீன ஊடுருவல் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களை கையில் எடுத்து எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

உத்திரப்பிரதேசம் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களுக்கு சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில்,நாடாளுமன்ற கூட்டத்தொடரானது மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Recent Posts

“கொஞ்சம் சகித்து போயிருக்கலாம்”…மணிமேகலைக்கு அட்வைஸ் கொடுத்த ஷகிலா!

“கொஞ்சம் சகித்து போயிருக்கலாம்”…மணிமேகலைக்கு அட்வைஸ் கொடுத்த ஷகிலா!

சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…

9 hours ago

பாஸ்போர்ட் அப்ளை செய்ய போறீங்களா.? அடுத்த 3 நாட்கள் முடியவே முடியாது.!

மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…

9 hours ago

INDvsBAN : “அவர் ரொம்ப உதவி பண்ணாரு”! சதம் விளாசிய பின் அஸ்வின் பேச்சு!

சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…

10 hours ago

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்! தங்கலான் முதல் வாழ வரை!

சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…

10 hours ago

‘இட்லி கடை’ போட்ட தனுஷ்.! மீண்டும் கேங்ஸ்டர் படமா?

சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…

10 hours ago

INDvBAN : சம்பவம் செய்து வரும் அஸ்வின்-ஜடேஜா! வலுவான நிலையில் இந்தியா!

சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…

10 hours ago