டெல்லி:2022-23 நிதி ஆண்டுக்கான நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் குடியரசுத் தலைவர் உரையுடன் இன்று தொடங்குகிறது.
2022-23 ஆம் நிதியாண்டுக்கான நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் இரண்டு கட்டங்களாக நடைபெறுகிறது.அதன்படி,நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் பகுதி இன்று (ஜன. 31) தொடங்கி பிப். 11 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. அந்த வகையில்,தொடக்க நாளான இன்று காலை 11 மணிக்கு இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தொடரில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையாற்றுகிறார்.அவரின் உரையில்,கடந்த ஆண்டில் மத்திய அரசு செயல்படுத்திய சாதனைகள் அனைத்தும் இடம்பெறும்.மேலும்,வருகின்ற நிதி ஆண்டில் மத்திய அரசு செயல்படுத்தவுள்ள உத்தேசித்துள்ள திட்டங்கள் குறித்த விவரங்களும் இடம்பெறுவதாக கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பொருளாதார ஆய்வறிக்கையை தாக்கல் செய்யவுள்ளார்.இதனையடுத்து,நாளை (பிப்ரவரி 1 ஆம் தேதி) காலை 11 மணிக்கு 2022-23 ஆம் நிதி ஆண்டுக்கான (காகிதம் இல்லாத வகையில் டிஜிட்டல் முறையில்)பட்ஜெட்டை மத்திய நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யவுள்ளார்.அதன்பின்னர்,பிப். 2 ஆம் தேதி முதல் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம் நடைபெறும்.
இதற்கிடையில்,இன்று (ஜனவரி 31) மற்றும் பிப்ரவரி 1 ஆகிய தேதிகளில் உடனடிக் கேள்வி நேரம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.ஆனால்,உடனடிக் கேள்வி நேரத்தில் எழுப்பும் விவகாரங்கள் தொடர்பாக பிப்.2 ஆம் தேதி முதல் எடுத்துக் கொள்ளப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து,இரண்டாம் கட்டட கூட்டத்தொடர் மார்ச் 14 ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 8 ஆம் தேதி வரையும் நடைபெறவுள்ளது.பட்ஜெட் கூட்டத் தொடரின் இறுதியில் இரு அவைகளின் கூட்டு கூட்டத்தில் பிரதமரின் நன்றி தெரிவிக்கும் நிகழ்வு நடைபெறவுள்ளது.
இதனிடையே,பெகாசஸ் உளவு விவகாரம் தொடர்பாக மீண்டும் சர்ச்சை எழுந்துள்ளதால்,இது குறித்தும் மற்றும் விவசாய நெருக்கடிகள்,கொரோனா 3 வது அலை,சீன ஊடுருவல் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களை கையில் எடுத்து எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
உத்திரப்பிரதேசம் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களுக்கு சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில்,நாடாளுமன்ற கூட்டத்தொடரானது மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : NDA கூட்டணிக்கு நாதக-வை, நயினார் நாகேந்திரன் அழைத்திருந்த நிலையில், அதற்கு சீமான் நன்றி தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று…
சென்னை : நடிகர் அர்ஜுனின் இளைய மகள் அஞ்சனா கடந்த 2023-ஆம் ஆண்டு ஹேண்ட் பேக் தயாரிக்கும் நிறுவனம் ஒன்றை…
சென்னை : தென்னாப்பிரிக்காவின் இளம் அதிரடி வீரரான டிவால்ட் பிரேவிஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இணைந்துள்ளார். சென்னை சூப்பர்…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…
சென்னை : இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் கமல், சிம்பு, அசோக் செல்வன், த்ரிஷா, அபிராமி ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள "தக்…
சென்னை : தவெக தலைவர் விஜய், கடந்த மார்ச் மாதம் சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெற்ற இப்தார் நோன்பு…