இந்தியாவில் இதுவரை 4.20 கோடி கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கடந்த ஓராண்டு காலமாக கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்தி வந்த நிலையில், தற்போது பல நாடுகளில் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. இந்நிலையில், இந்தியாவில் சமீப நாட்களாக கொரோனா வைரஸால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், இந்தியாவில் இதுவரை 4.20 கோடி கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது குறித்து தெரிவித்துள்ள சுகாதாரத்துறை அமைச்சகம், கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ் 3.48 கோடி பேருக்கும், இரண்டாவது டோஸ் 72.21 லட்சம் பேருக்கும் போட பட்டதாகவும், இந்தியாவில் ஒரே நாளில் 27.23 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்தியாவில், அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 40.60 லட்சம் தடுப்பூசிகளும் ராஜஸ்தானில் 40.47 லட்சம் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது. இதுவரை தமிழகத்தில், 19.64 லட்சம் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
சென்னை : 18-வது ஐபிஎல் சீசன் இந்த ஆண்டு வருகின்ற 22-ஆம் தேதி (சனிக்கிழமை) தொடங்கி வரும் மே 25-ஆம்…
சென்னை : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி - சட்டப் பேரவை உறுப்பினர் செங்கோட்டையன் இடையே அதிருப்தி நிலவுவதாக சமூக…
டெல்லி : ஐபிஎல் 2025 சீசன் இன்னும் ஒரு வாரத்திற்குள் தொடங்கவுள்ள நிலையில், வரப்போகும் இரண்டு மாத கால கிரிக்கெட்…
சென்னை : 2025 - 2026 ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை அத்துறையின் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்து, பல்வேறு புதிய…
வாஷிங்டன் : அமெரிக்க விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் ஜூன் மாதம் முதல் சர்வதேச…
சென்னை : தமிழ்நாட்டில் புதிய தேசிய கல்விக்கொள்கை வழியாக மத்திய அரசு இந்தியை திணிக்க முயற்சிப்பதாக தொடர்ந்து திமுக அரசு…