தலைநகரில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 1.25 லட்சத்தை கடந்தது!

Default Image

டெல்லியில் ஒரே நாளில் 1,349 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 1,25 லட்சத்தை கடந்தது.

டெல்லியில் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து கொண்டே வந்த நிலையில், தற்பொழுது குறைய தொடங்கியுள்ளது. இந்நிலையில் அங்கு புதிதாய் 1,349 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், அங்கு கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 1,25,096 ஆக அதிகரித்தது.

அதுமட்டுமின்றி, டெல்லியில் ஒரே நாளில் 1,200 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், அங்கு குணமடைந்தோரின் எண்ணிக்கை 1,06,118 ஆக அதிகரித்துள்ளது.

மேலும், ஒரே நாளில் 27 பேர் உயிரிழந்துள்ளதால், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 3,690 ஆக அதிகரித்துள்ளது.  டெல்லியில் 15,288 பேர் சிகிச்சை பெற்று வருவதாக டெல்லி சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்