உச்ச நீதிமன்ற தீர்ப்பை பொறுத்தே மத்திய அரசுடன் 9வது கட்ட பேச்சுவார்த்தை என விவசாயிகள் பிரதிநிதிகள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.
மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி டெல்லி எல்லைகளில் 48-வது நாளாக தொடர்ந்து விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். வேளாண் சட்டங்கள் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் இன்று வழக்கு விசாரணைக்கு வருகிறது. வரும் 15-ஆம் தேதி நாடு தழுவிய போராட்டதிக்ரு விவசாயிகள் அழைப்பு விடுத்துள்ளனர். உச்சநீதிமன்ற உத்தரவுக்கு பிறகு போராட்டத்தை தீவிரப்படுத்த விவசாயிகள் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், நீதிமன்றம் உத்தரவை பொறுத்தே மத்திய அரசுடன் வரும் 9-ஆம் தேதி பேச்சுவார்த்தை என விவசாயிகள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர். இதனிடையே, புதிய சட்டங்களை திரும்ப பெறுதல், குறைந்த ஆதார விலையை உறுதிப்படுத்துதல் போன்றவைகள் விவசாயிகளின் கோரிக்கையாக இருந்து வருகிறது. மத்திய அரசு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுடன் இதுவரை 8 கட்டங்களாக நடைபெற்ற பேச்சுவார்த்தையில் முக்கிய முடிவுகள் ஏதும் எட்டப்படவில்லை.
இறுதியாக நடந்த 8வது விவசாயிகளுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தை கூட தோல்வியில் முடிந்ததை தொடர்ந்து, மீண்டும் வரும் 9-ஆம் தேதி விவசாய பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை மேற்கொள்ளப்படும் என்று மத்திய அரசு அறிவித்திருந்தது. இந்த நிலையில் விவசாயிகள் உச்ச நீதிமன்ற தீர்ப்பை பொறுத்தே மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை என திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : தவெக தலைவர் விஜய், கடந்த மார்ச் மாதம் சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெற்ற இப்தார் நோன்பு…
சென்னை : அதிமுக - பாஜக கூட்டணியை மத்திய அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான அமித்ஷா அறிவித்தது தான் அறிவித்தார்.…
திருவள்ளூர் : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திருவள்ளூர் மாவட்டத்திற்கு பயணம் மேற்கொண்டு அங்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வில்…
ஏமன் : அமெரிக்க ராணுவம் நேற்று (ஏப்ரல் 17) ஏமனின் ஹொதெய்தா மாகாணத்தில் உள்ள ராஸ் இசா எண்ணெய் துறைமுகத்தின்…
சென்னை : வழக்கு எண் 18/9, ஓநாயும் ஆட்டுக்குட்டியும், மாநகரம், இறுகப்பற்று ஆகிய திரைப்படங்க்ளில் நடித்து தமிழ் சினிமாவில் நல்ல…
சென்னை : இன்று உலகம் முழுக்க கிறிஸ்தவ மதத்தினர் துக்க நாளாக அனுசரிக்கும் புனித வெள்ளி தினம் அனுசரிக்கப்படுகிறது. இன்றைய…