புதிய அரசாங்கம்  சகாப்தத்தை உருவாக்கும் – ராகுல் காந்தி

Default Image
  • ஜார்கண்ட் மாநிலத்தின் 11வது முதலமைச்சராக ஹேமந்த் சோரன்  பதவியேற்றார்.
  • ஜார்க்கண்டில் உள்ள புதிய அரசாங்கம்  சகாப்தத்தை உருவாக்கும் என்று நான் நம்புகிறேன்’ என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் நவம்பர் மாதம் 30-ஆம் தேதி தொடங்கி, டிசம்பர் மாதம் 20ஆம் தேதி வரை 5 கட்டமாக நடைபெற்றது. இதில் 81 சட்டமன்ற தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் பாஜக தனித்து போட்டியிட்டது. காங்கிரஸ் – ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியுடன் இணைந்து களம் கண்டது.

இந்த தேர்தலில் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா – காங்கிரஸ் கூட்டணி 47 தொகுதிகளில் வெற்றிபெற்றது. தனித்து போட்டியிட்ட பாஜக 25 இடங்களை மட்டுமே கைப்பற்றி இருந்தது. அதனால், ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியை சேர்ந்த ஹேமந்த் சோரன் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ஜார்கண்ட் மாநிலத்தின் 11வது முதலமைச்சராக ஹேமந்த் சோரன் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவருக்கு ஆளுநர் திரௌபதி பதவி பிரமாணம் செய்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி,திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் சிறப்பு விருந்திரனாக கலந்துகொண்டனர்.

இந்நிலையில் காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.அவரது பதிவில்,  ஜார்க்கண்டில் புதிய கூட்டணி அரசாங்கம் அனைவருக்காகவும் பணியாற்றும்.குடிமக்களின் நலனுக்காகவும்,மாநிலத்தில் அமைதி மற்றும் செழிப்பான சகாப்தத்தை உருவாக்கும் என்று நான் நம்புகிறேன் என்று பதிவிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்