மாணவர்களே…நீட் தேர்வுக்கான நேரம் அதிகரிப்பு – தேசிய தேர்வு முகமை வெளியிட்ட அறிவிப்பு!

Published by
Edison

நீட் தேர்வுக்கான நேரம் மேலும் 20 நிமிடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.

2022-23 ஆம் கல்வியாண்டில் எம்பிபிஎஸ்,பிடிஎஸ் உள்ளிட்ட இளங்கலை மருத்துவ படிப்புகளில் சேர்வதற்கான நீட் தேர்வு வருகின்ற ஜூலை 17 ஆம் தேதி இந்தியாவில் 543 இடங்களில் நடைபெறவுள்ளதாக தேசிய தேர்வு முகமை (NTA) அறிவித்துள்ளது.

மேலும்,நீட் தேர்வுக்கு வருகின்ற மே மாதம் 6 ஆம் தேதி வரை https://neet.nta.nic.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என்றும்,தேர்வுக்கான கட்டணத்தை செலுத்த அடுத்த மாதம் 7 ஆம் தேதிதான் கடைசி நாள் என்றும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

இந்நிலையில்,தமிழ்,ஆங்கிலம்,இந்தி உள்ளிட்ட 13 மொழிகளில் நடைபெறும் நீட் தேர்வுக்கு,இதுவரை 3 மணி நேரமே வழங்கப்பட்ட நிலையில்,தேர்வுக்கான நேரத்தை மேலும் அதிகரித்து தேசிய தேர்வு முகமை உத்தரவிட்டுள்ளது.

அதன்படி,200 கேள்விகளுக்கு 20 நிமிடம் கூடுதலாக தேர்வு எழுத நேரம் வழங்கப்படுகிறது.அந்த வகையில்,நீட் தேர்வு வருகின்ற ஜூலை 17 ஆம் தேதியன்று பிற்பகல் 2 மணிக்கு தொடங்கி மாலை 5.20 மணிக்கு(3 மணி 20 நிமிடம்) நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக,இந்தியாவுக்கு வெளியே 14 இடங்களில் நீட் தேர்வு நடைபெறும் என என்டிஏ தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Recent Posts

என்னால முடியல..பாதியிலே கிளம்பிய சஞ்சு சாம்சன்! அடுத்த போட்டியில் விளையாடுவாரா?

என்னால முடியல..பாதியிலே கிளம்பிய சஞ்சு சாம்சன்! அடுத்த போட்டியில் விளையாடுவாரா?

டெல்லி :  ஏப்ரல் 16 அன்று டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி விளையாடியது. இந்தப்…

32 minutes ago

சிம்பு படமா? அப்போ 13 கோடி கொடுங்க…தயாரிப்பாளரிடம் கண்டிஷன் போட்ட சந்தானம்!

சென்னை : நடிகர் சந்தானம் தொடர்ச்சியாகவே ஹீரோவாகவே படங்களில் நடித்து வரும் நிலையில் மீண்டும் காமெடியனாக அவரை பார்க்க மாட்டோமா…

1 hour ago

“பொறுமைக்கும் எல்லை உண்டு.., வரம்பு மீறி போறீங்க.!” சேகர்பாபு மீது அண்ணாமலை கடும் விமர்சனம்!

சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் கூட்டத்தொடரில் சுற்றுலாத்துறை மற்றும் இந்து சமய அறநிலையத்துறையின் மானிய கோரிக்கைகள் மீதான விவாதம்…

2 hours ago

அதிமுக – பாஜக கூட்டணி ஆட்சியா? கேள்விக்கு நயினார் நாகேந்திரன் கொடுத்த ரியாக்சன்!

சென்னை : அதிமுக – பாஜக வருகின்ற 2026 சட்டமன்றத்தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிடவுள்ளதாக அறிவித்தததை தொடர்ந்து ஆட்சியில் பங்கு அதிகாரத்தில்…

2 hours ago

அதிமுக – பாஜக : “கூட்டணி தான் ஆனால் கூட்டணி ஆட்சி இல்லை” – தம்பிதுரை பரபரப்பு விளக்கம்!

சென்னை : ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு என்ற குரல் தற்போது தமிழக அரசியலில் மிக அதிகமாக ஒலித்து கொண்டிருக்கின்றன.…

2 hours ago

இபிஎஸ் பதில் தான் என்னோட பதில்! செய்தியாளர் கேட்ட கேள்விக்கு டென்ஷனான முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்!

சென்னை : 2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் அதிமுக- பாஜக கூட்டணி அமைத்துள்ளதாக மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவித்திருந்தார். இந்த…

3 hours ago