நீட் தேர்வுக்கான நேரம் மேலும் 20 நிமிடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.
2022-23 ஆம் கல்வியாண்டில் எம்பிபிஎஸ்,பிடிஎஸ் உள்ளிட்ட இளங்கலை மருத்துவ படிப்புகளில் சேர்வதற்கான நீட் தேர்வு வருகின்ற ஜூலை 17 ஆம் தேதி இந்தியாவில் 543 இடங்களில் நடைபெறவுள்ளதாக தேசிய தேர்வு முகமை (NTA) அறிவித்துள்ளது.
மேலும்,நீட் தேர்வுக்கு வருகின்ற மே மாதம் 6 ஆம் தேதி வரை https://neet.nta.nic.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என்றும்,தேர்வுக்கான கட்டணத்தை செலுத்த அடுத்த மாதம் 7 ஆம் தேதிதான் கடைசி நாள் என்றும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
இந்நிலையில்,தமிழ்,ஆங்கிலம்,இந்தி உள்ளிட்ட 13 மொழிகளில் நடைபெறும் நீட் தேர்வுக்கு,இதுவரை 3 மணி நேரமே வழங்கப்பட்ட நிலையில்,தேர்வுக்கான நேரத்தை மேலும் அதிகரித்து தேசிய தேர்வு முகமை உத்தரவிட்டுள்ளது.
அதன்படி,200 கேள்விகளுக்கு 20 நிமிடம் கூடுதலாக தேர்வு எழுத நேரம் வழங்கப்படுகிறது.அந்த வகையில்,நீட் தேர்வு வருகின்ற ஜூலை 17 ஆம் தேதியன்று பிற்பகல் 2 மணிக்கு தொடங்கி மாலை 5.20 மணிக்கு(3 மணி 20 நிமிடம்) நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக,இந்தியாவுக்கு வெளியே 14 இடங்களில் நீட் தேர்வு நடைபெறும் என என்டிஏ தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லி : ஏப்ரல் 16 அன்று டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி விளையாடியது. இந்தப்…
சென்னை : நடிகர் சந்தானம் தொடர்ச்சியாகவே ஹீரோவாகவே படங்களில் நடித்து வரும் நிலையில் மீண்டும் காமெடியனாக அவரை பார்க்க மாட்டோமா…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் கூட்டத்தொடரில் சுற்றுலாத்துறை மற்றும் இந்து சமய அறநிலையத்துறையின் மானிய கோரிக்கைகள் மீதான விவாதம்…
சென்னை : அதிமுக – பாஜக வருகின்ற 2026 சட்டமன்றத்தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிடவுள்ளதாக அறிவித்தததை தொடர்ந்து ஆட்சியில் பங்கு அதிகாரத்தில்…
சென்னை : ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு என்ற குரல் தற்போது தமிழக அரசியலில் மிக அதிகமாக ஒலித்து கொண்டிருக்கின்றன.…
சென்னை : 2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் அதிமுக- பாஜக கூட்டணி அமைத்துள்ளதாக மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவித்திருந்தார். இந்த…