கர்நாடக முதல்வர் குமாரசாமி பதவிக்கு சிக்கல் ஏற்பட்டு உள்ள நிலையில் எடியூரப்பா முதல்வராக வேண்டும் என அவரது குடும்பத்தினர் சிறப்பு பூஜை மற்றும் யாமம் நடத்தி வருகின்றனர்.
மேலும் எடியூரப்பா முதல்வராக வேண்டும் என பாஜக நிர்வாகிகள் மட்டுமல்லாமல் கர்நாடக அதிமுகவினரும் சிறப்பு பூஜை செய்து வருகின்றனர்.இந்நிலையில் எடியூரப்பாவின் தீவிர ஆதரவாளரும் , பாஜக எம்.பியுமான ஷோபா கரந்தலாஜே நேற்று முன்தினம் மைசூரில் உள்ள சாமுண்டீஸ்வரி மலையில் உள்ள அம்மன் கோவிலில் வெறும் காலில் 1001 படிக்கட்டு ஏறி சிறப்பு வழிபாடு செய்தார்.
அப்போது அவருடன் இருந்த பாஜகவினர் எடியூரப்பா முதல்வராக வேண்டும் என முழக்கங்கள் எழுப்பினார்.பின்னர் பேசிய ஷோபா கரந்தலாஜே ,குமாரசாமி பெரும் பான்மையை இழந்து விட்டதால் தார்மீக ரீதியில் முதல்வர் பதவியை ராஜினாமா செய்யவேண்டும் என கூறினார்.
ஆளுநர் உத்தரவிட்ட பிறகும் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தாமல் நாடகமாடி வருகிறார். அவரது சுயநல நாடகத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் எனவே எடியூரப்பா முதல்வராக வேண்டும் என சாமுண்டீஸ்வரி மலையில் உள்ள அம்மனிடம் வேண்டிக் கொண்டேன் என கூறினார்.
கோவை : தவெக தலைவர் விஜய், கோவையில் இன்று இரண்டாவது நாளாக ரோட் ஷோவில் ஈடுபட்டுள்ளார். சரவணம்பட்டியில் நேற்று பூத்…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 45வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு…
ராவல்பிண்டி : 26 பேர் கொல்லப்பட்ட பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா தொடர்ச்சியான எதிர் நடவடிக்கைகளை…
சென்னை: தமிழகத்தில் கனிம வளங்கள் அடிப்படை யில், நில வரி விதிப்பதற்கு, குவாரி உரிமையா ளர்கள் மத்தியில் எதிர்ப்பு எழுந்துள்ளது.…
கோவை : தமிழ்நாடு அரசியலில் எதிரும் புதிருமாக இருந்து வரும் தவெக மற்றும் திமுக ஆகிய இரு கட்சிகளும் இன்றைய…
மும்பை : லக்னோ மற்றும் மும்பை அணிகள் மாலை 3:30 மணிக்கும், டெல்லி மற்றும் பெங்களூரு அணிகள் இரவு 7:30…