Categories: இந்தியா

பெற்ற மகனை கழுத்தை அறுத்து கொலை செய்த தாய்! உ.பி.யில் நடந்த அதிர்ச்சி!

Published by
பால முருகன்

உத்தரப்பிரதேசம் : பிஜ்னோரை சேர்ந்த மனநலம் சரியில்லாத பெண் ஒருவர் தனது 4 வயது மகனை கழுத்தை அறுத்து கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மனநலம் சரியில்லாத ஆதேஷ் தேவி தனது குழந்தையை கொலை செய்த பிறகு வீட்டிற்குள் இருந்த அடுப்பில் உடலை எரிக்கவும் முயற்சி செய்து இருக்கிறார்.

தேவியின் கணவர் கபில் குமார் வேலை முடிந்து வீட்டிற்கு வந்தபோது மகன் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடைப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார். உடனடியாக உதவிக்கு குடும்ப உறுப்பினர்களை அழைத்துள்ளார். குடும்ப உறுப்பினர்கள் வந்ததும், தேவி தனது கையில் மண்வெட்டி ஒன்றை எடுத்துக்கொண்டு வீட்டிற்குள் தனது கணவர் குமார் மற்றும் குடும்ப உறுப்பினர்களை வர விடாமல் விரட்டினார்.

இதனையடுத்து, குமார் உடனடியாக காவல்துறையினருக்கு தகவலை தெரிவித்தார். பின் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், குழந்தையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், கணவர் குமார் கொடுத்த புகாரின் அடிப்படையில் தேவி மீது கொலை வழக்கு பதிவு செய்தனர்.

போலீசார் விசாரணை செய்த போது பல கேள்விகள் கேட்டும் தேவி அமைதியாக இருந்தார். அதன் பிறகு அவருடைய சகோதரர் தேவி “மனநிலை சரியில்லாதவர்” என்று காவல்துறைக்கு தகவலை தெரிவித்தார். இருப்பினும், விசாரணை இன்னும் நடந்து வருகிறது.

Published by
பால முருகன்

Recent Posts

ENGvsAUS : தொடரை சமன் செய்த இங்கிலாந்து! 186 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தல்!

லார்ட்ஸ் : இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் சுற்றுப்பயணத்தில் ஒருநாள் தொடரானது நடைபெற்று வருகிறது. இதற்கு…

8 hours ago

“இழிவா பேசாதீங்க”..மணிமேகலை VS பிரியங்கா பிரச்சினை குறித்து கொந்தளித்த நிஷா!

சென்னை : மணிமேகலை vs பிரியங்கா இருவருக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சினை, பெரிய அளவில் சர்ச்சையாக வெடித்த நிலையில், இப்போது…

15 hours ago

தெரிக்கவிடலாமா.. துபாயில் ரேஸ் காரை ஓட்டி பார்த்த நடிகர் அஜித்.!

சென்னை : படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் நடிகர் அஜித் குமார், இன்னொரு பக்கம் கார் ரேஸ் போட்டியில் கலந்து கொள்வதற்கான…

15 hours ago

3 ஏ.டி.எம் கொள்ளை., ரூ.65 லட்சம் பணம்.! கேரளா போலீஸ் பரபரப்பு தகவல்கள்…

நாமக்கல் : இன்று காலையில் நாமக்கல் குமாரபாளையம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் சினிமா பாணியில் வேகமாக சென்ற கண்டெய்னர் லாரியை…

16 hours ago

சோனியா காந்தியுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு..!

டெல்லி : நேற்று அரசு முறைப்பயணமாக டெல்லிச் சென்ற தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், இன்று காலை பிரதமர் மோடியை…

16 hours ago

நவராத்திரி ஸ்பெஷல்.. நவராத்திரி பூஜையில் வைக்கபடும் 9 வகை சாதங்கள் எது தெரியுமா ?

சென்னை- நவராத்திரி அன்று அம்பிகைக்கு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நெய்வேத்தியங்கள்  படைக்கப்படுகிறது. அதைப்பற்றி இந்த ஆன்மீக செய்தி குறிப்பில் தெரிந்து…

16 hours ago