UP woman slits throat of son [file image]
உத்தரப்பிரதேசம் : பிஜ்னோரை சேர்ந்த மனநலம் சரியில்லாத பெண் ஒருவர் தனது 4 வயது மகனை கழுத்தை அறுத்து கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மனநலம் சரியில்லாத ஆதேஷ் தேவி தனது குழந்தையை கொலை செய்த பிறகு வீட்டிற்குள் இருந்த அடுப்பில் உடலை எரிக்கவும் முயற்சி செய்து இருக்கிறார்.
தேவியின் கணவர் கபில் குமார் வேலை முடிந்து வீட்டிற்கு வந்தபோது மகன் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடைப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார். உடனடியாக உதவிக்கு குடும்ப உறுப்பினர்களை அழைத்துள்ளார். குடும்ப உறுப்பினர்கள் வந்ததும், தேவி தனது கையில் மண்வெட்டி ஒன்றை எடுத்துக்கொண்டு வீட்டிற்குள் தனது கணவர் குமார் மற்றும் குடும்ப உறுப்பினர்களை வர விடாமல் விரட்டினார்.
இதனையடுத்து, குமார் உடனடியாக காவல்துறையினருக்கு தகவலை தெரிவித்தார். பின் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், குழந்தையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், கணவர் குமார் கொடுத்த புகாரின் அடிப்படையில் தேவி மீது கொலை வழக்கு பதிவு செய்தனர்.
போலீசார் விசாரணை செய்த போது பல கேள்விகள் கேட்டும் தேவி அமைதியாக இருந்தார். அதன் பிறகு அவருடைய சகோதரர் தேவி “மனநிலை சரியில்லாதவர்” என்று காவல்துறைக்கு தகவலை தெரிவித்தார். இருப்பினும், விசாரணை இன்னும் நடந்து வருகிறது.
தருமபுரி : நடிகை விஜயலட்சுமி, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது பாலியல் வழக்கு பதிவு செய்திருந்தார். இந்த…
லாகூர் : சாம்பியன்ஸ் டிராபி 2025-இன் 10வது போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் இன்று மோதுகின்றன. இந்தப் போட்டி…
சென்னை : நாகை, திருவாரூர், தஞ்சாவூர் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக நேற்றைய தினம், சென்னை வானிலை…
சென்னை : நடிகை பாலியல் புகாரில் சென்னை வளசரவாக்கம் போலீஸ் ஸ்டேஷனில் மாலை 6 மணிக்கு நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர்…
சென்னை : சீமான் வீட்டின் கேட் மீது நேற்று போலீசார் ஒட்டிய சம்மனை, பாதுகாவலர் கிழித்ததால் தகராறு ஏற்பட்டது. நேற்றைய…
துபாய் : சாம்பியன்ஸ் டிராபி தொடரில், இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் விளையாடும் மேட்ச் வரும் 2-ம் தேதி துபாயில்…