காணாமல் போன மருமகள் வீட்டிற்கு திரும்பி வர தனது நாக்கை பிளேடால் வெட்டி மாமியார் கடவுளுக்கு காணிக்கையாக கொடுக்க துணிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த லக்சுமி நிரலா என்பவர் வீட்டு வேலை செய்து வருகிறார். இவரது மகன் ஜோதி என்பவரை திருமணம் செய்து கொண்டுள்ளார். இந்த தம்பதியருக்கு ஒரு குழந்தையும் உள்ளது. கடந்த ஆகஸ்ட் 14ம் தேதி நிரலாவின் மருமகளான ஜோதி, அவரது குழந்தையுடன் காணாமல் போயுள்ளார். வெள்ளிக்கிழமை முழுவதும் ஜோதியின் கணவரும், மாமனாரும் தேடியும் கிடைக்காமல் போக போலீசில் புகார் செய்துள்ளனர்.
மருமகள் மீது அன்பு வைத்திருந்த நிரலா அப்பகுதியில் உள்ள சிவபெருமான் கோவிலில் சென்று மருமகள் திரும்பி வர வேண்டி தனது நாக்கை பிளேடால் வெட்டி காணிக்கை கொடுத்துள்ளார். முதலில் மருத்துவமனையில் செல்ல முடியாது என்று கூறி அடம் பிடிக்க, அக்கம்பக்கத்தினர் நிரலாவை சமாதானப்படுத்தி ஜாம்ஷெட்பூரின் எம். ஜி. எம். எம். சி. எச் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இனி அவரால் பேச முடியாது என்று மருத்துவர்கள் கூறியுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இது குறித்து நிரலா கணவர் கூறுகையில், யாரோ
ஒருவர் லக்சுமியிடம் கடவுளுக்கு நாக்கை காணிக்கையாக கொடுத்தால் மருமகள் திரும்பி வருவாள் என்று கூறியதால் அவர் இவ்வாறு செய்ததாக கூறியுள்ளார்.
சென்னை : இயக்குனர் செல்வராகவன் அவ்வப்போது முக்கிய அறிவுரைகளை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவாக வெளியிட்டு வருகிறார். அந்த வகையில்,…
டெல்லி : சென்னை காவல் நிலையத்தில் ஓர் இளைஞர் தனது போனில் குழந்தைகள் தொடர்பான ஆபாச படங்களை வைத்திருந்ததாக கூறி…
சென்னை -தளிகை என்றால் என்ன ,பெருமாளுக்கு தளிகை எவ்வாறு வைப்பது என்பதை பற்றி இந்த ஆன்மீகக் குறிப்பில் அறிந்து கொள்ளலாம்.…
சென்னை : அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் என்பது இந்த ஆண்டு நவம்பர் அல்லது டிசம்பர்…
சென்னை : 2025 ஆஸ்கரில் 'சிறந்த வெளிநாட்டு படங்கள்' பிரிவில் போட்டியிடுவதற்காக இந்தியாவில் இருந்து அதிகாரப்பூர்வ தேர்வாக, இயக்குநர் கிரண்…
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 24.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…