நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 3,29,942 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது என்று சுகாதார அமைச்சகம் அறிவிப்பு.
இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 3,29,942 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், மொத்தம் பாதிப்பு எண்ணிக்கை 2,29,92,517 ஆக அதிகரித்துள்ளது. அதுபோல் நேற்று ஒரே நாளில் 3,876 பேர் கொரோனவுக்கு பலியான நிலையில், 2,49,992 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர்.
அதுமட்டுமில்லாமல் கடந்த 24 மணிநேரத்தில் 3,56,082 பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,90,27,304 ஆக உள்ளது. தற்போது கொரோனாவுக்கு மருத்துவமனையில் 37,15,221 பேர் சிகிச்சை பெற்று வருவதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கொரோனாவில் இருந் குணமடைந்தோர் விகிதம் 82.75% ஆகவும், இதுவரை கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களின் எண்ணிக்கை 17,27,10,066 ஆக உள்ளது என்றும் தெரிவித்துள்ளனர். இதனிடையே, உலக முழுவதும் 159,607,702 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், 3,317,747 பேர் உயிரிழந்துள்ளனர். 137,298,659 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர்.
கொரோனா பாதிப்பில் உலக அளவில் அமெரிக்கா 33,515,308 பாதிப்புகளுடன் முதல் இடத்திலும், இந்தியாவில் 22,992,517 பேர் பாதிக்கப்பட்டு இரண்டாவது இடத்திலும் உள்ளது என்பது குறிப்பிடப்படுகிறது.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…