#Breaking:இந்தியா முழுவதும் 8 வாரங்கள் முழு ஊடங்கு-ஐசிஎம்ஆர் அறிவிப்பு..!!!

Published by
Edison

இந்தியா முழுவதும் 6 முதல் 8 வாரங்கள் முழு ஊடங்கு தேவை என்று இந்திய மருத்துவ ஆரய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்) வலியுறுத்தியுள்ளது.

இந்தியா முழுவதும் கொரோனா தொற்றின் இரண்டாவது அலையானது மிகத் தீவிரமாக பரவி வருகிறது.இதனால்,நாளுக்கு நாள் கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.இதன்காரணமாக,கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு போதுமான மருத்துவ படுக்கை வசதிகள்,ஆக்சிஜன் வசதிகள் கிடைக்காமல் பற்றாக்குறை ஏற்பட்டு வருகிறது.

அதனால்,கொரோனா இரண்டாவது அலையை கட்டுப்படுத்த நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு மற்றும் முழு ஊரடங்கு போன்ற சில கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளது.

இதனையடுத்து,கிராமப்புற பகுதிகளிலும் தற்போது கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது.மேலும்,தமிழ்நாடு,கேரளா,டெல்லி,மகாராஷ்டிரா உள்ளிட்ட 15 மாநிலங்களில் கொரோனா பரவல் 10 சதவிகிதத்திற்கும்மேல் அதிகரித்துள்ளது.

இந்நிலையில்,,நாடு முழுவதும் முழு ஊரடங்கு போன்ற கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வேண்டும் என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் இயக்குநர் பல்ராம் பார்கவா கூறுகையில்,”கிராமப்புறங்களில்  கொரோனா பரிசோதனைகளை அதிகரிக்க அங்குள்ள பள்ளிகள் மற்றும் சமுதாய நலக்கூடங்களில் ரேபிட் ஆன்டிஜன் சோதனைகளை அதிக அளவில் நடத்த வேண்டும்.மேலும்,வைரஸ் தொற்று தேசிய அளவில் 21 சதவிகிதம் இருக்கும் நிலையில் சில மாவட்டங்களில் 42 சதவிகிதமாக அதிகரித்துள்ளது.

எனவே,நாடு முழுவதும் கொரோனா தொற்று 10 சதவிகிதத்திற்கும் அதிகமாக உள்ள மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களில் 6 முதல் 8 வாரங்கள் முழு ஊடங்கு அவசியம் போட வேண்டும்.அதன்பிறகு,கொரோனா பரவல் குறையும் பட்சத்தில் படிப்படியாக தளர்வுகளை அந்தந்த மாநிலங்கள் அறிவித்துகொள்ளலாம்”,என்று வலியுறுத்தியுள்ளார்.

 

Recent Posts

ஐபிஎல் 2025: கிரிக்கெட் சிகர்களுக்கு குட் நீயூஸ் சொன்ன மெட்ரோ.! சிஎஸ்கே போட்டிக்கு இலவச பயணம்…

ஐபிஎல் 2025: கிரிக்கெட் சிகர்களுக்கு குட் நீயூஸ் சொன்ன மெட்ரோ.! சிஎஸ்கே போட்டிக்கு இலவச பயணம்…

சென்னை : 18-வது ஐபிஎல் சீசன் இந்த ஆண்டு வருகின்ற 22-ஆம் தேதி (சனிக்கிழமை) தொடங்கி வரும் மே 25-ஆம்…

4 hours ago

சபாநாயகரை சந்தித்தது ஏன்? ‘இதற்காக தான் போனேன்’ – செங்கோட்டையன் பதில்.!

சென்னை : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி - சட்டப் பேரவை உறுப்பினர் செங்கோட்டையன் இடையே அதிருப்தி நிலவுவதாக சமூக…

6 hours ago

ஐபிஎல் 2025 சிஎஸ்கே பிளேயிங் லெவன் இதுதான்? தோனிக்கு இடமிருக்கா?

டெல்லி : ஐபிஎல் 2025 சீசன் இன்னும் ஒரு வாரத்திற்குள் தொடங்கவுள்ள நிலையில், வரப்போகும் இரண்டு மாத கால கிரிக்கெட்…

6 hours ago

“வேளாண் பட்ஜெட் பெயரில் பொய், புரட்டு” – அண்ணாமலை கடும் விமர்சனம்.!

சென்னை : 2025 - 2026 ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை அத்துறையின் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்து, பல்வேறு புதிய…

9 hours ago

“ஒருவித அழுத்தமான சூழல்., ஆனாலும்., ” சுனிதா வில்லியம்ஸ் மீட்பு குறித்து நாசா கருத்து!

வாஷிங்டன் : அமெரிக்க விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர்  ஜூன் மாதம் முதல் சர்வதேச…

9 hours ago

“மொழிகளைத் தாண்டி திரைப்படங்களை பார்க்க தொழில்நுட்பம் உதவியாக உள்ளது” – பவன் கல்யாணுக்கு கனிமொழி பதிலடி.!

சென்னை : தமிழ்நாட்டில் புதிய தேசிய கல்விக்கொள்கை வழியாக மத்திய அரசு இந்தியை திணிக்க முயற்சிப்பதாக தொடர்ந்து திமுக அரசு…

10 hours ago