சகோதரிகளான இரண்டு சிறுமிகளை கடத்தி 4 மாதம் பலாத்காரம் செய்த நபர்!

Default Image

ராஜஸ்தான் மாநிலம் டோலாப்பூர் மாவட்டத்தில் உள்ள காவல் நிலையத்தில் ஜூலை 10-ம் தேதி வந்த சிறுமி ஒருவர் தனக்கு நேர்ந்த கொடுமைகளை கூறி கதறி அழுதுள்ளார்.கடந்த ஏப்ரல் 24-ம் தேதி அன்று அந்த சிறுமி தனது சகோதரியுடன் மார்க்கெட்டுக்கு சென்றுள்ளார்.

அப்போது அங்கு வந்த நரேஷ் குஜ்ஜார் என்ற நபர் அந்த சிறுமியையும் அவரது சகோரியையும் கடத்தி சென்றுள்ளார்.பின்னர் ஒரு அறையில் அடைத்து வைத்து விட்டு தொடர்ச்சியாக பலாத்காரம் செய்து வந்துள்ளார்.

அவர்கள் எங்கே இருந்தனர்,எந்த ஊரில் இருந்தனர் என்று கூட அந்த சிறுமிக்கு தெரியவில்லை.அந்த நபர் அசந்த நேரத்தில் அந்த இடத்தில் இருந்து அந்த சிறுமி மட்டும் தப்பி ஓடிவந்துள்ளார்.

இந்நிலையில் சிறுமியின் வாக்குமூலத்தின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து சிறுமியின் சகோதரி அடைத்து வைக்கப்பட்டிருக்கும் இடத்தை தேடிவருகின்றன.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்