கர்நாடகாவில் ஊரடங்கின் போது பிடிபட்ட நபர் போலீசாரிடம் கோழிக்கு மலச்சிக்கல் என்று கூறியுள்ளார்.
கர்நாடகாவில் தற்போது ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ள நிலையில் கட்டுப்பாடுகளை மீறி வீட்டை விட்டு வெளியே வந்த நபர் போலீசாரால் பிடிக்கப்பட்ட போது கோழிக்கு மலச்சிக்கல் இருப்பதாக கூறியுள்ளார்.
தற்போது இந்தியா முழுவதும் கொரோனா 2 வது காட்டுத்தீ போல் பரவி இருப்பதால், மத்திய மற்றும் மாநில அரசுகள் கொரோனா தொற்று பரவல் சங்கிலியை உடைக்க ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது.
இதன் விளைவாக கர்நாடகாவில் அத்தியாவசிய வேலைகளுக்காக மட்டுமே மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற அனுமதிக்கப்படுகிறார்கள், மேலும் தெருக்களில் காணப்படுபவர்கள் ஏன் வீட்டை விட்டு வெளியேறினார்கள் என்று ஒரு குறிப்பிட்ட காரணத்தை வழங்க வேண்டும் என்று போலீஸ் அதிகாரிகள் கூறியுள்ளனர்.
சமீபத்தில், கர்நாடகாவின் கடக்கில் ஒரு நபர் ஊரடங்கு விதிகளை மீறியதற்காக போலீசாரால் பிடிக்கப்பட்டார், அதற்கு அவர் அளித்த காரணத்தால் போலீசார் திகைத்து நின்றனர். மேலும் ஊரடங்கு மத்தியில் எங்கு செல்கிறீர்கள் என்று போலீஸ் அவரை விசாரித்தபோது, அந்த நபர் தனது கோழிக்கு மலச்சிக்கல் பிரச்சனை இருப்பதால் ஒரு கால்நடை மருத்துவரிடம் அழைத்துச் செல்வதாக கூறியுள்ளார்.
இக்காரணத்தைக் கேட்ட போலீஸ் அதிகாரிகள் சிரித்துவிட்டு அந்த நபரை வீட்டிற்கு திருப்பி அனுப்பி, மலச்சிக்கல் பிரச்சினைக்கு வீட்டிலேயே சிகிச்சை செய்யுமாறு அவருக்கு அறிவுறுத்தியுள்ளனர்.
இந்த சம்பவம் வீடியோவாக பதிவு செய்யப்பட்டு பின்னர், ட்விட்டர் பயனர் அமித் உபாத்யே என்பவரால் ட்விட்டரில் பதிவிடப்பட்டு தற்போது வைரலாகி உள்ளது.
அகமதாபாத் : இங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள் தொடரை இந்திய அணி ஏற்கனவே, 2-0 என்ற கணக்கில் கைப்பற்றிவிட்ட நிலையில்,…
சென்னை : இயக்குநர் கெளதம் தினானுரி இயக்கத்தில் உருவாகியுள்ள விஜய் தேவரகொண்டாவின் புதிய படத்திற்கு ‘கிங்டம்’ என பெயர் சூட்டப்பட்டுள்ளது.…
கலிபோர்னியா : சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் மற்றும் அவரது…
கொழும்பு : இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலியா அணி, இரண்டு டெஸ்ட் மற்றும் இரண்டு ஒரு நாள் தொடரில் விளையாடி…
சென்னை : விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அதன் உட்கட்டமைப்பை மறுசீரமைக்கும்…
கேரளா : சஞ்சு சாம்சனுக்கு நேற்று வலது ஆள்காட்டி விரலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இந்நிலையில், சஞ்சு சாம்சனுக்கு கை…