உத்திரபிரதேசத்தில், லக்கிம்பூர் கேரி மாவட்டத்தில், மௌசமாபாத் கிராமத்தில், புறநகரில் உள்ள ஒரு குளம் அருகே விலங்குகளால் உண்ணப்பட்ட நிலையில், குழந்தையின் உடல் மீட்பு.
உத்திரபிரதேசத்தில், லக்கிம்பூர் கேரி மாவட்டத்தில், மௌசமாபாத் கிராமத்தில், புறநகரில் உள்ள ஒரு குளம் அருகே ஒன்பது மாத பெண் குழந்தையின் பாதியளவு உடல் சாப்பிட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் வீட்டின் முற்றத்தில் தாயுடன் தூங்கிக்கொண்டிருந்த போது குழந்தை காணாமல் போனதாக, குழந்தை ஷிவானியின் பெற்றோர் பூல்பேஹாட் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இந்நிலையில், காவல் கண்காணிப்பாளர் (எஸ்எஸ்பி) விஜய் துல், குழந்தையை கண்டுபிடிப்பதற்காக இரண்டு குழுக்களை நியமித்தார். இன்ஸ்பெக்டர் ஷ்யாம் நாராயண் சிங் தலைமையிலான குழுவினர் சடலத்தை கண்டுபிடித்தனர்.
இதுகுறித்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த இன்ஸ்பெக்டர் ஷ்யாம் நாராயண் சிங், ஷிவானியின் வீடு கிராமத்தின் விளிம்பில் உள்ளது மற்றும் விவசாய வயல்களால் சூழப்பட்டுள்ளது. அறுவடைக்கு தயாராக இருக்கும் கரும்பு பயிர்களுக்கு மத்தியில் பன்றிகள், ஓநாய்கள் மற்றும் சிறுத்தைகள் போன்ற பல மாமிச உண்ணிகள் பதுங்கியுள்ளன. சமீபத்தில், ஓநாய்கள் கூட்டம் கிராமத்தில் இரண்டு ஆடுகளை கொன்றது என தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், குழந்தையின் உடல் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டதில், பரிசோதனை முடிவுகள், குழந்தை மிருகத்தால் கொல்லப்பட்டது உறுதி செய்யப்பட்டது. சில காட்டு விலங்குகள் குழந்தையை தூக்கிக்கொண்டு சென்றதாக சந்தேகிக்கப்படுகிறது.
இந்த மாவட்டத்தில் இது போன்ற சம்பவம் இரண்டாவது முறையாக நடைபெற்றுள்ளது. ஏற்கனவே, ஜூலை 29 அன்று, மாவட்டத்தின் மைகல்கஞ்ச் பகுதியில் இதேபோல் மூன்று வயது சிறுமி கொல்லப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று,…
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…