நிதி ஒதுக்கீடு தொடர்பாக 10 எம்எல்ஏக்கள் கையெழுத்திட்ட கடிதம் போலியானது..! கர்நாடக காங்கிரஸ்

Published by
செந்தில்குமார்

நிதி ஒதுக்கீடு தொடர்பாக 10 எம்.எல்.ஏ.க்கள் கையெழுத்திட்ட கடிதத்தை போலி எனக் கூறி கர்நாடக காங்கிரஸ் நிராகரித்துள்ளது.

கர்நாடகாவில் உள்ள காங்கிரஸ் எம்எல்ஏக்கள், முதல்வர் சித்தராமையாவுக்கு எழுதியதாகக் கூறப்படும் கடிதம் போலியானது என காங்கிரஸ் கட்சி நிராகரித்துள்ளது. அந்த கடிதத்தில் நிதி ஒதுக்கீடு மற்றும் பல பிரச்சனைகள் தொடர்பாக எழுதப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

அந்த கடிதத்தில் மாநிலத்தில் ஆளும் காங்கிரஸின் 10 எம்எல்ஏக்கள் கையெழுத்திட்டுள்ளனர். எம்.எல்.ஏ.க்களின் கோரிக்கைகளுக்கு மாவட்ட பொறுப்பு அமைச்சர்கள் செவிசாய்க்கவில்லை என்றும், அவர்களின் தொகுதிகளுக்கு ஒதுக்கப்பட்ட நிதியும் விடுவிக்கப்படவில்லை என்றும் அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய 10 எம்எல்ஏக்களில் ஒருவர், அந்தக் கடிதம் தனிப்பட்ட அறிக்கை என்றும், வியாழக்கிழமை நடைபெறும் காங்கிரஸ் சட்டமன்றக் கட்சி (சிஎல்பி) கூட்டத்தில் இது குறித்து விவாதிக்கப்படும் என்றும் கூறினார். மேலும், எம்.எல்.ஏ.வான பி.ஆர்.பாட்டீலும், கடிதத்தின் நம்பகத்தன்மை குறித்து கேள்வி எழுப்பி, பாஜக தான் அதை உருவாக்கியதாக குற்றம்சாட்டி உள்ளார்.

Letter
Published by
செந்தில்குமார்

Recent Posts

“யார் அந்த தியாகி? பதில் சொல்லுங்க முதலமைச்சரே.,” இபிஎஸ் சரமாரி கேள்வி!

சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவை நிகழ்வில் கலந்து கொள்ள வந்த அதிமுக எம்எல்ஏக்கள், ' யார் அந்த தியாகி?'…

32 minutes ago

CSK மீதான விமர்சனம்.., “இனி அப்படி நடக்காது” விளக்கம் கொடுத்த அஸ்வின் யூடியூப் சேனல்!

சென்னை : நடப்பு ஐபிஎல் சீசனில் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4 போட்டிகளில் விளையாடி…

1 hour ago

அதிமுக வெளிநடப்பு.. சிங்கிளாக பேட்ஜை கழற்றிவைத்துவிட்டு பேசிய செங்கோட்டையன்.!

சென்னை : தமிழக சட்டப்பேரவையில் மானிய கோரிக்கைகள் தொடர்பாக கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இன்று வீட்டுவசதித்துறை மானிய கோரிக்கைகள் நடைபெற்று…

2 hours ago

தமிழ்நாடு பாஜக ‘புதிய’ தலைவர் யார்? பிரதமர் அருகில் கடைசி நேர இருக்கை ஒதுக்கீடு?

சென்னை : தமிழ்நாடு பாஜக தலைவராக தற்போது அண்ணாமலை பொறுப்பில் இருக்கிறார். இவர் விரைவில் மாற்றம் செய்யப்படுகிறார் என்றும், விரைவில்…

2 hours ago

மசூதியின் மீது ஏறி காவிக் கொடி கட்ட முயன்ற இந்துத்துவா அமைப்பினர்! உ.பி.யில் பரபரப்பு சம்பவம்.!

உத்தரபிரதேசம் : நேற்று, நாடு முழுவதும் இந்து பண்டிகையான ராம நவமி கொண்டாடப்பட்டது. இந்த நிலையில், உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜ்…

2 hours ago

யார் அந்த தியாகி? “நொந்து போய் நூடுல்ஸ் ஆகிய அதிமுகவினர்” மு.க.ஸ்டாலின் கடும் விமர்சனம்!

சென்னை : தமிழக சட்டப்பேரவையில் மானிய கோரிக்கைகள் தொடர்பாக கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இன்று வீட்டுவசதித்துறை மானிய கோரிக்கைகள் நடைபெற்று…

3 hours ago