Categories: இந்தியா

குக்கர் குண்டு வெடிப்புக்கு ‘நாங்கள்’ பொறுப்பு.! வெளியான பகீர் கடிதம்.! போலீசார் விளக்கம்.!

Published by
மணிகண்டன்

மங்களூரு குக்கர் குண்டு வெடிப்புக்கு ஐஆர்சி என்ற அமைப்பு பொறுப்பேற்பதாகவும், கர்நாடகாவில், தட்சினகன்னடா மாவட்டம் கத்ரியில் உள்ள மஞ்சுநாத் கோவிலை தகர்க்க திட்டமிட்டதாகவும் மர்ம கடிதம் ஒன்று காவல்துறை வசம் சிக்கியுள்ளது. 

கர்நாடக மாநிலம், மங்களூருவில் சில தினங்களுக்கு முன்னர் ஆட்டோவில் குக்கர் குண்டு ஒன்று வெடித்தது. இதில் ஆட்டோ ஓட்டுனரும், உடன் பயணித்தவரும் காயமடைந்தனர். இதில் காயமடைந்த முகமது ஷாரிக் என்பவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

முகமது ஷாரிக் பற்றி காவல்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். அதில் அவர் தமிழகத்தில் கோவை, மதுரை, சென்னை ஆகிய ஊர்களுக்கு வந்தது தெரியவந்துள்ளது. இன்னும் விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், இந்த குக்கர் குண்டு வெடிப்புக்கு ஐஆர்சி என்ற அமைப்பு பொறுப்பேற்பதாகவும், கர்நாடகாவில், தட்சினகன்னடா மாவட்டம் கத்ரியில் உள்ள மஞ்சுநாத் கோவிலை தகர்க்க திட்டமிட்டதாகவும், அந்த முயற்சி தோல்வியில் முடிந்தாலும் இதை வெற்றியாக கருதுகிறோம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.

இந்த கடிதம் பற்றி கர்நாடக காவல்துறை சார்பில் கூறுகையில், இப்படி ஒரு அமைப்பை இதுவரை நாங்கள் கேள்வி பட்டதில்லை. இதன் உண்மை தன்மை குறித்து ஆராய்ந்து வருகிறோம் எனவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Recent Posts

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…

9 hours ago

ரீல்ஸ் செய்த வார்னருக்கு அடித்த ஜாக்பாட்.! புஷ்பா-னா சும்மாவா!!!

சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில்  உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…

11 hours ago

வட இந்தியாவில் வசூல் வேட்டை செய்யும் GOAT! 14 நாட்களில் எத்தனை கோடிகள் தெரியுமா?

சென்னை :  GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…

11 hours ago

திருப்பதி லட்டு தோன்றிய வரலாறு தெரியுமா ?

சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று  நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…

11 hours ago

INDvsBAN : பும்ரா வேகத்தில் சுருண்ட வங்கதேசம்! 2-ஆம் நாளிலும் முன்னிலை பெற்று வரும் இந்தியா அணி!

சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…

12 hours ago

பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்கின் கொழுப்பா.? விளக்கம் அளித்த அறநிலையத்துறை.!

சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…

12 hours ago