[Image source : ANI]
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுனா கார்கே மகன் பிரியங்க் கார்கே மீது கர்நாடக பாஜகவினர் தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளனர்.
கர்நாடகா சட்டசபை தேர்தல் நெருங்கி விட்ட காரணத்தால், பிரதான கட்சித் தலைவர்கள் தங்களது தேர்தல் பிரச்சாரத்தை தீவிரப்படுத்தி உள்ளனர். அப்போது மற்ற கட்சித் தலைவர்களை பற்றி விமர்சித்து பேசுவது வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது. ஏற்கனவே காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பிரதமர் மோடி குறித்து விஷப்பாம்பு என விமர்சித்து, பின்னர் தான் அப்படி கூறவில்லை என விளக்கம் அளித்தார்.
அதே போல கார்கே மகன் பிரியங்க் கார்கேவும் பிரச்சார பேச்சால் சிக்கியுள்ளார்.அதாவது, கர்நாடக சட்டசபை தேர்தல் பிரச்சாரத்தின் போது , பிரதமர் மோடி குறித்து மதிப்பில்லாத மகன் (நாலயக் பீட்டா) என விமர்சித்து இருந்தார்.
பிரியங்க் கார்கேவின் இந்த விமர்சனத்தை அடுத்து , பெங்களூருவில், தேர்தல் ஆணையத்தில் கர்நாடக பாஜகவினர் பிரியங்க் கார்கே மீது புகார் அளித்துள்ளனர். பிரதமர் மோடி குறித்து அவதூறாக விமர்சித்துள்ளார். அது குறித்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டு உள்ளனர்.
சீனா : கடந்த மாதம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அமெரிக்காவின் பொருளாதாரத்தை கருத்தில் கொண்டு அமெரிக்கா பொருட்களுக்கு மற்ற…
அகமதாபாத் : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் போட்டியில் குஜராத் அணியும், ராஜஸ்தான் அணியும் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி…
சென்னை : தமிழகத்தில் நீட் தேர்வு ரத்து செய்யக்கோரி கோரிக்கைகள் எழுந்துகொண்டிருந்த சூழலில், இன்று இன்று (ஏப்ரல் 09) தமிழகத்தில் நீட்…
அகமதாபாத் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் குஜராத் அணியும், ராஜஸ்தான் அணியும் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் மோதுகிறது.…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், மருந்துகளுக்கு பெரிய அளவில் இறக்குமதி வரி விதிக்கப்பட உள்ளதாக அறிவித்தது பெரும்…
சென்னை : நீட் விலக்கு குறித்து ஆலோசனை மேற்கொள்ள இன்று தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமயில் அனைத்துக்கட்சி கூட்டம்…