நாளை மறுநாள் புதுச்சேரி அமைச்சரவையின் பதவியேற்பு நிகழ்வு நடைபெறவுள்ளது.
புதுச்சேரியில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் பாஜகவுடன் இணைந்து போட்டியிட்டு பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்தது. என்.ஆர்.காங்கிரஸ் – பா.ஜனதா கூட்டணியின் முதல்வராக ரங்கசாமி பதவியேற்றார்.
பின்னர்,என்ஆர்.காங்கிரஸ் -பாஜக இடையே சபாநாயகர் ஒதுக்கீடு மற்றும் அமைச்சர் பங்கீட்டில் உடன்பாடு ஏற்படாததால் கடந்த ஒரு மாதமாக இழுபறி நீடித்தது. இதனையடுத்து, பாஜகவுக்கு சபாநாயகர் மற்றும் 2 அமைச்சர் பதவியை விட்டுக்கொடுக்க முதல்வர் ரங்கசாமி ஒப்புக்கொண்டார்.
பின்னர்,புதுச்சேரி சபாநாயகராக பாஜக எம்எல்ஏ செல்வம் பதவியேற்றுக்கொண்டார்.முதல்வர் ரங்கசாமி, எதிர்க்கட்சித் தலைவர் சிவா ஆகியோர் சபாநாயகர் இருக்கையில் அமர வைத்தனர்.
இதனைத் தொடர்ந்து,கடந்த சில நாட்களுக்கு முன்னர் பாஜக அமைச்சரவைக்கான பெயர் பட்டியலில் ஜான்குமார் அவர்களின் பெயர் இடம்பெறாதால்,அவரின் ஆதரவாளர்கள் புதுச்சேரியில் உள்ள பாஜக அலுவலகத்தை சூறையாடினர்.இதனால்,அமைச்சர்கள் பதவியேற்பு தள்ளிப்போனது.
இதனையடுத்து,50 நாட்களுக்குப் பிறகு,புதுச்சேரி அமைச்சரவைக்கான பெயர் பட்டியலை,அம்மாநில முதல்வர் ரங்கசாமி அவர்கள்,துணை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனிடம் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் கொடுத்தார்.
இந்நிலையில்,நாளை மறுநாள் மதியம் 2.30 மணிக்கு புதுச்சேரி அமைச்சரவையின் பதவியேற்பு நிகழ்வு நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தூத்துக்குடி: தஞ்சாவூரில் இருந்து திருமண நிகழ்ச்சி ஒன்றிற்காக பயணித்து சாத்தான்குளம் வட்டம், மீரான்குளம் பகுதியில் சாலையோரமாக இருந்த 50 அடி…
பெங்களூர் : இந்தியா, பாகிஸ்தான் தாக்குதலால் நிறுத்தப்பட்ட ஐபிஎல் தொடர் மீண்டும் இன்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணி…
சென்னை : திருவான்மியூர் - தரமணி சாலையில் திடீரென ஏற்பட்ட பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னையின்…
ஹரியானா : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கப்பட்டதிலிருந்து இந்தியாவை உளவு பார்த்ததாகவும், பாகிஸ்தானின் ஐஎஸ்ஐக்கு தகவல்களை வழங்கியதாகவும் கூறி, ஹரியானாவில் இதுவரை…
பெங்களூர் : இந்தியா-பாகிஸ்தான் எல்லை பதட்டங்கள் காரணமாக 10 நாள் இடைவெளிக்குப் பிறகு ஐபிஎல் போட்டிகள் மீண்டும் தொடங்கவுள்ள நிலையில்,…
சீனா : 2019 ஆம் ஆண்டில் உலகையே உலுக்கிய கொரோனா வைரஸ் தொற்று, ஆசியாவின் சில பகுதிகளில் மீண்டும் பரவி…