நேரம் பார்த்து காத்திருந்து மனைவியின் கள்ளக்காதலனை தீர்த்துக்கட்டிய கணவன் கைது.
மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள நாசிக் பகுதியை சேர்ந்த ஹர்சுலே எனும் இடத்தில் வசித்து வரக்கூடிய கட்டிட ஒப்பந்தகாரர் ஒருவரின் மனைவிக்கும் தம்பலே என்பவருக்கும் கள்ளத்தொடர்பு இருந்து வந்துள்ளது. கட்டிட ஒப்பந்தகாரர் வேலை விஷயமாக அடிக்கடி வெளியூர் செல்வதால், அதை பயன்படுத்திக்கொண்ட தம்பலே அவரது வீட்டிற்கு சென்று ஒப்பந்தகாரர் மனைவியுடன் அடிக்கடி தவறான தொடர்பில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் இவர்களது கள்ளக்காதல் குறித்து கட்டிட ஒப்பந்தகாரரிடம் கிராம மக்கள் தெரிவித்துள்ளனர். இதனால் அடிக்கடி தனது மனைவியுடன் இது குறித்து கேட்டு தகராறு செய்து வந்த ஒப்பந்தகாரர் ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்ததால் திட்டமிட்டு தம்பலேவை கொலை செய்ய முயற்சித்துள்ளார்.
இந்நிலையில் வெளியூர் செல்வது போல சென்றுவிட்டு இவர்கள் இருவரும் ஒன்றாக இருக்கிறார்கள் என்பதை அருகில் உள்ளவர்கள் மூலம் அறிந்து, அதன் பின் வீட்டிற்கு வந்து தம்பலேவை கொலை செய்துள்ளார் ஒப்பந்தகாரர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் கொலை செய்த ஒப்பந்தகாரர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…