நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் தனது தீவிரத்தை அதிகரித்த வண்ணம் தான் உள்ளது. இந்நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்கு உறவினர்கள் மற்றும் உடன் பிறந்தவர்கள் கூட முன்வராத சூழ்நிலை தற்போது உருவாகியுள்ளது. தங்கள் உயிர் பாதுகாக்கப்பட்டால் போதுமென்ற அளவிற்கு மக்கள் தற்பொழுது உயிர் வாழ்வதற்கு அச்சப்பட்டு வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.
இந்நிலையில் தெலுங்கானா மாநிலத்தில் உள்ள மஞ்சிரியாலா மாவட்டம் லட்செட்டிபெட்டா பகுதியை சேர்ந்த பெத்தையா என்பவரது மனைவிக்கு கடந்த 5 நாட்களுக்கு முன்பதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து தனது மனைவியை வீட்டுக்குள் வரக்கூடாது என்று கூறி பெத்தையா வீட்டிற்கு வெளியில் உள்ள சிறிய அளவு குளியலறையில் அவரது மனைவியை தங்க வைத்துள்ளார். மேலும் அவருக்கு போதிய அளவு உணவு கூட வழங்காமல் வீட்டுக்குள் அனுமதிக்காமல் வைத்திருந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் நரசிம்மாவை அவரது கணவர் துன்புறுத்துவதை பார்த்த அக்கம்பக்கத்தினர், காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் நரசம்மாவை பாத்ரூமிலிருந்து மீட்டதுடன் பெத்தையாவிற்கு மனநல ஆலோசனை வழங்கி, நாராசம்மாவை அவரது வீட்டில் உள்ள தனி அறையில் தங்க வைக்க ஏற்பாடு செய்துள்ளனர்.
சென்னை : தென்தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது இதன் காரணமாக நேற்று சில மாட்டவங்களில் மழை…
ஸ்ரீநகர் : நேற்று (ஏப்ரல் 22) உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில், ஜம்மு-காஷ்மீரின் ஆனந்த்நாக் மாவட்டம், பஹல்காம் பகுதியில்…
லக்னோ : கடந்த ஆண்டு லக்னோ அணிக்காக கேப்டனாக விளையாடிய கே.எல்.ராகுல் சில போட்டிகளில் அணி தோல்வி அடைந்த காரணத்தால் உரிமையாளரிடம்…
ஸ்ரீநகர் : ஜம்மு-காஷ்மீர், ஆனந்த்நாக் மாவட்டத்தின் பஹல்காம் பகுதியில் உள்ள பைசரான் பள்ளத்தாக்கில் ஏப்ரல் 22 அன்று மாலை தீவிரவாதிகள்…
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் லக்னோ கிரிக்கெட் மைதானத்தில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், டெல்லி கேபிட்டல்ஸ் அணியும்…
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், அக்சர் படேல் தலைமையிலான…