மனைவிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து மனைவியை கொன்று விட்டு கணவன் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் பாட்னாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாடு முழுவதிலும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் தான் உள்ளதே தவிர குறைந்தபாடில்லை. தினமும் லட்சக்கணக்கானோர் புதிதாக பாதிக்கப்படுவதுடன் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்து கொண்டும் இருக்கின்றனர். இந்நிலையில் கொரோனாவை ஒழிப்பதற்காக மத்திய அரசாங்கம் எவ்வளவு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தாலும், உயிரிழப்புகள் தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறது. மேலும், பலர் கொரோனாவுடன் போராட தைரியமின்றி தாங்களாகவே தங்கள் உயிரை மாய்த்துக் கொள்கின்றனர்.
ஆனால் பீகார் மாநிலத்தில் உள்ள பாட்னாவில் ரயில்வே துறையில் பணி செய்யக்கூடிய அதுல் லால் எனும் நபர் தனது மனைவிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து தனது மனைவியை கொலை செய்துள்ளார். அதன்பின் மாடியில் இருந்து கீழே குதித்து தானும் தற்கொலை செய்து கொண்டுள்ளார். சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து விசாரணை நடந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாஷிங்டன் : அமெரிக்க விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் ஆகியோர் கடந்த வருடம் ஜூன் மாதம் ஸ்டார்…
சென்னை : பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் கட்ட அமர்வு டெல்லி நாடாளுமன்றத்தில் நேற்று முன்தினம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த…
டெல்லி : அண்மையில் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபியை கைப்பற்றிய கொண்டாட்டத்தில் இந்திய அணி வீரர்கள் இருக்கும்…
இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் பலுசிஸ்தான் மாகாண தலைநகர் குவெட்டாவிலிருந்து வடக்கு நகரமான பெஷாவருக்கு சென்று கொண்டிருந்த பயணிகள் ரயிலை நேற்று…
சென்னை : தேசிய கல்வி கொள்கையை ஆதரிக்கும் வகையில் உள்ள PM Shri திட்டத்தில் தமிழகத்தை இணைக்க மத்திய அரசு…
சென்னை : மக்கள் தொகை அடிப்படையில் மக்களவை தொகுதிகள் மறுசீரமைப்பு செய்யப்பட உள்ளதாக திமுக தொடர்ந்து கூறிவருகிறது. இந்த தொகுதி…