3-வதும் பெண்குழந்தை என்பதால் மனைவியின் வயிற்றை கத்தியால் அறுத்து கருவை கலைத்த கணவன்..!

Published by
Sharmi

தனக்கு பிறக்கவிருக்கும் 3 ஆவது குழந்தையும் பெண்குழந்தை என்று தெரிந்த காரணத்தால் வீட்டில் வைத்து தனது மனைவியின் வயிற்றை அறுத்து கருவை கலைத்துள்ள கணவன். 

கர்நாடக மாநிலத்தில் விஜயாபுரா பகுதியில் உள்ள கிராமத்தை சேர்ந்த தம்பதி அரவிந்த், விஜயலட்சுமி. இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளன. இந்நிலையில் விஜயலட்சுமி மீண்டும் கர்ப்பம் அடைந்துள்ளார். அரவிந்த் தனக்கு ஆண் குழந்தை பிறக்கபோகவதாக உறவினர்களிடம் தெரிவித்து வந்துள்ளார். அதன் பிறகு, வயிற்றில் என்ன குழந்தை வளர்கிறது என்பதை தெரிந்து கொள்ள ஸ்கேன் சென்டருக்கு மனைவியை அழைத்து சென்றுள்ளார்.

அங்கு மனைவியின் வயிற்றில் வளர்வது பெண் குழந்தை என்று தெரிவித்தவுடன் அரவிந்த் மனமுடைந்துள்ளார். மூன்றாவதும் பெண் குழந்தை என்பதால் அந்த குழந்தையை கலைக்குமாறு மனைவியிடம் தெரிவித்துள்ளார். ஆனால் மனைவி மறுத்துவிட்டார். இதன் காரணத்தால், 2 நபர்களை அழைத்து வந்து வீட்டில் இருக்கும் தனது மனைவியின் கருவை கலைக்க முற்பட்டுள்ளார். இதனை எதிர்த்த விஜயலட்சுமியின் வயிற்றை அரவிந்த் மற்றும் 2 நபர்கள் சேர்ந்து கத்தியால் அறுத்து கருவை கலைத்துள்ளனர்.

கத்தியால் கிழித்ததால் விஜயலட்சுமிக்கு ரத்தம் வெளியேற ஆரம்பித்துள்ளது. இதனை பார்த்து மூவரும் அவ்விடம் விட்டு தப்பி சென்றுள்ளனர். விஜயலட்சுமியின் உயிர் ஊசலாடி கொண்டிருக்க, அக்கம் பக்கத்தினர் இவரை விரைவாக தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். தற்போது இவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், இந்த சம்பவம் குறித்த விசாரணையில் விஜயாபுரா புறநகர் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

அரவிந்த் மற்றும் உடன் இருந்த இருவரையும் வலைவீசி தேடி வருகின்றனர். இந்நிலையில், குழந்தை பிறப்பதற்கு முன்பே எந்த குழந்தை என்பதை கூறுவது சட்டவிரோத செயல் அதன்படி, ஸ்கேன் சென்டரில் விசாரணை நடைபெற்று வருகிறது.

Published by
Sharmi

Recent Posts

போப் பிரான்சிஸ் உடல் நல்லடக்கம்! உலக நாட்டு தலைவர்கள் நேரில் மரியாதை!

போப் பிரான்சிஸ் உடல் நல்லடக்கம்! உலக நாட்டு தலைவர்கள் நேரில் மரியாதை!

வாடிகன் : கடந்த ஏப்ரல் 21-ல் மறைந்த போப் பிரான்சிஸின் இறுதி சடங்கு இன்று (ஏப்ரல் 26) காலை வாடிகான்…

14 hours ago

“ஓட்டு மட்டுமே குறிக்கோள் இல்லை., மக்களோடு பேசுங்கள்!” விஜய் கொடுத்த ‘குட்டி’ அட்வைஸ்!

கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி கருத்தரங்கம் தொடங்கி நடைபெற்று வருகிறது.…

15 hours ago

ஈரான் துறைமுகத்தில் பயங்கர வெடி விபத்து! 300க்கும் மேற்பட்டோர் காயம்!

தெஹ்ரான் : தெற்கு ஈரானின் பந்தர் அப்பாஸ் நகரில் ஷாகித் ராஜீ துறைமுகம் செயல்பட்டு வருகிறது. அங்கு இன்று திடீரென…

15 hours ago

தவெக பூத் கமிட்டி கருத்தரங்கில் சிறிய தீ விபத்து? “ஒதுங்கி நில்லுங்கள்!” விஜய் அட்வைஸ்!

கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பூத் கமிட்டி கருத்தரங்கம் கோவை சரவணம்பட்டியில் உள்ள தனியார்…

16 hours ago

தவெக பூத் கமிட்டி கருத்தரங்கு.., என்ன பேசப்போகிறார் விஜய்?

கோவை : தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் இன்றும் நாளையும் தேர்தல் வாக்குசாவடி முகவர்களுக்கான கருத்தரங்கம் நடைபெற உள்ளது.…

17 hours ago

கட்டாய கடன் வசூல்., 3 ஆண்டுகள் சிறை! புதிய சட்ட மசோதா விவரங்கள் இதோ…

சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கட்டாய கடன் வசூலை தடுக்கும் பொருட்டு புதிய…

19 hours ago