Categories: இந்தியா

வீட்டிற்கு தாமதமாக வந்ததால் கேள்வி கேட்ட கணவன்..! ஆத்திரத்தில் ஆசிட் வீசிய மனைவி..!

Published by
செந்தில்குமார்

உத்திரப் பிரதேசத்தில் கணவன் மீது மனைவி ஆசிட் வீசிய சம்பவம் அரங்கேறியுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில் வீட்டிற்கு தாமதமாக வந்த கணவரின் முகத்தில் அவரது மனைவி ஆசிட் வீசியுள்ளார். கான்பூரில் கூப்பர்கஞ்ச் பகுதியில் டப்பு குப்தா மற்றும் பூனம் தம்பதிகள் வசித்து வருகின்றனர். குப்தாவின் மனைவி வெளியே சென்று விட்டு வீட்டிற்கு தாமதமாக வந்துள்ளார். அவர் தனது மனைவியிடம் வீடு திரும்ப தாமதமானதற்கான காரணத்தைக் கேட்டுள்ளார்.

அதற்கு பூனம் , அது உன்னுடைய வேலை இல்லை என்று பதிலளித்துள்ளார். சில நிமிடத்தில் இந்த சிறிய பேச்சுவார்த்தை மிகப் பெரிய சண்டையாக மாறியது. சண்டை முற்றியதைத் தொடர்ந்து பூனம் அவரது கணவன் குப்தா மீது ஆசிட்டை வீசினார். இதனால் குப்தாவின் முகத்தில் பலத்த தீக்காயம் ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் பூனத்தை கைது செய்தனர்.

இந்த சம்பவம் குறித்து அருகில் உள்ள மக்களிடம் போலீசார் விசாரித்தபோது குப்தா தான் இதற்கு காரணம் என்றும் அவர் மது அருந்திவிட்டு அடிக்கடி மனைவியுடன் சண்டையிடுவார் என்றும் கூறினார். இது குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Published by
செந்தில்குமார்

Recent Posts

பாரம்பரிய முறையில் மாவிளக்கு செய்வது எப்படி.?

பாரம்பரிய முறையில் மாவிளக்கு செய்வது எப்படி.?

சென்னை -புரட்டாசி சனிக்கிழமை பெரும்பாலானோர்  பெருமாளுக்கு மாவிளக்கு படைக்கப்படுவது வழக்கம் . பெருமாளுக்கு பிடித்த மாவிளக்கு செய்வது எப்படி என…

30 mins ago

குக் வித் கோமாளி 5 : அடுத்த தொகுப்பாளர் யார்? வெளியான ப்ரோமோ!

சென்னை : மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக அதிக பார்வையாளர்களைக் கொண்ட ஒரு நிகழ்ச்சி தான் 'குக் வித் கோமாளி'.…

1 hour ago

2025 ஆஸ்கர் விருது: போட்டியில் ‘வாழை’ உள்ளிட்ட 6 தமிழ் திரைப்படங்கள்!

டெல்லி : சினிமா உலகில் மிக உயரிய விருதாக கருதப்படும் ஆஸ்கர் விருது ஆண்டுதோறும் அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில்…

2 hours ago

“நாம தான் முட்டாள் ஆயிருவோம்”! மணிமேகலை-பிரியங்கா சர்ச்சையை குறித்து பேசிய KPY சரத்!

சென்னை : சமீபத்தில் வெடித்த மணிமேகலை - பிரியங்கா சர்ச்சை தற்போது வரை தணியாமல் மேலும் மேலும் வெடித்து கொண்டே…

3 hours ago

ஆம்ஸ்ட்ராங் கொலைக்கும் சீசிங் ராஜாவுக்கும் தொடர்பில்லை.! காவல்துறை விளக்கம்.!

சென்னை : பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு வந்த பிரபல ரவுடி சீசிங் ராஜாவை நேற்று ஆந்திர மாநிலம் கடப்பாவில் நேற்று…

3 hours ago

ரஷ்ய சர்வதேச மேடையில் ஒலித்த தமிழ்.. கொட்டுக்காளிக்கு குவியும் விருது.!

சென்னை : இயக்குனர் பி.எஸ்.வினோத்ராஜ் இயக்கத்தில் சூரி மற்றும் அன்னா பென் நடித்துள்ள "கொட்டுக்காளி" திரைப்படம் ஒவ்வொரு சர்வதேச மேடையிலும்…

3 hours ago